சினிமா
ரேகா

சினிமாவில் நடிப்பது அவருக்கு பிடிக்காது - ரேகா உருக்கம்

Published On 2019-08-19 13:17 GMT   |   Update On 2019-08-19 13:17 GMT
கடலோரக் கவிதைகள் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான ரேகா, சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமாவில் நடிப்பது அவருக்கு பிடிக்காது என்று கூறியிருக்கிறார்.
பாரதிராஜா இயக்கிய கடலோரக் கவிதைகள் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ரேகா. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து புகழ்பெற்ற ரேகாவுக்கு புன்னகை மன்னன் மிகப்பெரிய வெற்றியையும் ரசிகர்களையும் பெற்றுக் கொடுத்தது.

தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ரேகா, சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில், தான் நடித்த ஒரே ஒரு படத்தை மட்டும் தான் தனது தந்தை பார்த்துள்ளார் என்றும் சினிமாவில் நடிப்பது தந்தைக்கு பிடிக்காது என்றும், அதற்கு காரணம் என் மீது அவர் வைத்திருந்த அதிக அன்பும் அக்கறையும் தான் என்றும் கூறினார்.



மேலும் பேசிய அவர், தந்தையின் மறைவுக்குப் பின் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் அவருக்கு ஒரு கல்லறை எழுப்பியதாகவும், தான் இறந்த பின், தந்தையை அடக்கம் செய்த இடத்துக்கு அருகில் தன்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் ரேகா விருப்பம் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News