சினிமா
ஏ.பி.ஸ்ரீதர்

வில்லனாக மிரட்ட வரும் பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

Published On 2019-08-18 07:22 GMT   |   Update On 2019-08-18 07:25 GMT
அறிமுக இயக்குநர் குமரன் இயக்கத்தில் கதிர் ஹீரோவாக நடித்துவரும் `ஜடா' படத்தில் பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் வில்லனாக நடித்துள்ளார்.
`பரியேறும் பெருமாள்' படத்திற்குப் பின் கதிர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் `ஜடா'. பொயட் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியுள்ளார். கதிர் இப்படத்தில் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அறிமுக நாயகி ரோஷினி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ஆடுகளம்’ கிஷோர், லிஜீஸ் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். `விக்ரம் வேதா' இசையமைப்பாளர் சாம் சி.எஸ்தான் இப்படத்துக்கும் இசையமைத்திருக்கிறார். 



குறிப்பாக இப்படத்தில் பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் நடித்துள்ளார். ஓவியம் வரைவதில் கைதேர்ந்த இவர் தற்போது ஜடா படத்தில் வில்லனாக மிரட்ட காத்திருக்கிறார் என்பது டீசர் மூலம் தெரியவருகிறது. இவர் ஏற்கனவே ஆந்திராமெஸ் படத்தில் நடித்துள்ளார். மேலும் மய்யம் என்ற படத்தை தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான ஜடா படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 
Tags:    

Similar News