சினிமா
கையில் கட்டுடன் கமலிடம் பேசும் மதுமிதா

பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா? - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா

Published On 2019-08-17 16:39 GMT   |   Update On 2019-08-17 16:44 GMT
பிக்பாஸ் போட்டியாளர் மதுமிதா கையில் கட்டுடன் வெளியேறியதால், அவர் பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா என பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை:

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் அபிராமி, கவின், லாஸ்லியா, முகின், மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் நடிகை மதுமிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். 

பிக்பாஸ் வீட்டில் நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டு அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதை நிரூபிக்கும் வகையில் நடிகை மதுமிதா கையில் கட்டுடன் கமல்ஹாசனை சந்திக்கும் காட்சிகள் வெளியாகியிருக்கிறது.

தற்போது கேப்டனாக இருக்கும் நிலையில் மதுமிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் பிக்பாஸ் முதல் சீசனில் நடிகை ஓவியா நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News