சினிமா
பிரபாஸ்

திருமணம் எப்போது? - மனம் திறந்த பிரபாஸ்

Published On 2019-08-17 07:18 GMT   |   Update On 2019-08-17 07:18 GMT
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், திருமணம் எப்போது நடக்கும் என்ற கேள்விக்கு மனம் திறந்து பேட்டியளித்திருக்கிறார்.
பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் நடித்துள்ள பிரம்மாண்ட படம் சாஹோ. அருண் விஜய், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபாஸ் அளித்த பேட்டி:

பாகுபலி படத்துக்கு பிறகு அறிமுக இயக்குனர் இயக்கத்தில் நடித்தது ஏன்?

பாகுபலிக்கு பிறகு எளிமையான காதல் கதையில் தான் நடிக்க திட்டமிட்டேன். இந்த கதையை கேட்டதும் ஆச்சர்யம் ஆனேன். எல்லோருக்கும் பிடித்ததால் அது படமாகவும் மாறியது.

பாகுபலிக்காக 4 ஆண்டுகள், சாஹோவுக்காக 3 ஆண்டுகள். ரசிகர்களை இப்படி காக்க வைப்பது ஏன்?

படத்தில் இடம்பெற்ற பிரம்மாண்ட காட்சிகளுக்காக இத்தனை காலம் தேவைப்பட்டது.

பாகுபலி வெற்றி உங்களுக்கு அழுத்தம் கொடுக்குமே?

அப்படி எதுவும் இல்லை. ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தால் போதும். அந்த படம் ஒரு வரலாறு.



உங்கள் சம்பளம் 100 கோடி என்று செய்தி வந்ததே?

இது என் நண்பர்கள் தயாரிக்கும் படம். 12 நிமிட காட்சிக்காக 80 கோடி செலவு செய்துள்ளோம். படத்தின் பட்ஜெட் மிக பெரியது. அந்த பட்ஜெட்டில் குறிப்பிட்ட சதவீதம் தான் என் சம்பளமாக இருக்கும்.

தமிழில் எந்த இயக்குனருடன் பணிபுரிய விருப்பம்?

மணிரத்னம், சங்கர், கவுதம் மேனன் என்று பெரிய பட்டியல் இருக்கிறது.

திருமணம் எப்போது?

எப்போது நடக்குமோ அப்போது நடக்கும். காதல் திருமணமாகவும் இருக்கலாம்.
Tags:    

Similar News