சினிமா
பாலிவுட்டில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை தமிழில் ரீமேக் செய்ய தனுஷ் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாரி 2 படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை, துரை செந்தில் இயக்கும் பட்டாஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ், ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார், காலா பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரது படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.
மேலும் வடசென்னை 2, செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம், பாலிவுட்டில் ஒரு படம் என அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், பாலிவுட்டில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ’ஆர்டிகில் 15’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய தனுஷ் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தனுஷ் இதில் நடிப்பாரா? இல்லை தயாரிப்பாரா? என்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.