சினிமா
அஜித்

தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி- அஜித்தின் ரிசல்ட் என்ன தெரியுமா?

Published On 2019-08-01 07:53 GMT   |   Update On 2019-08-01 07:53 GMT
கோவையில் நடைபெற்று வரும் தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்ட நடிகர் அஜித்தின் முதல் சுற்று முடிவு வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் நடிப்புத்துறை மட்டுமல்லாது கார் ரேஸ், போட்டோகிராபி, ஏரோ மாடலிங், சமையல் என பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து வருபவர். பல ஆண்டுகளாக ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் சிறிய ரக விமானங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்த அவர், எம்.ஐ.டியை சேர்ந்த தக்ஷா எனும் மாணவர் குழுவுடன் சேர்ந்து சிறிய அளவிலான ஆளில்லா விமானம் தயாரிக்க வழிகாட்டியாக செயல்பட்டார்.

தற்போது தனது கவனத்தை துப்பாக்கி சுடுதல் பக்கம் திருப்பியுள்ளார். தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கம் சார்பாக கோவை காலவர் பயிற்சி மையத்தில் துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. 



இதில் 10 மீட்டர் பிரிவில் சென்னை ரைபில் கிளப் சார்பாக நடிகர் அஜித்குமார் பங்கேற்றார். அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர்கள் இதில் கலந்துகொண்டனர்.

முதல் சுற்றில் 71 புள்ளிகள், இரண்டாம் சுற்றில் 79 புள்ளிகள், மூன்றாம் சுற்றில் 83 புள்ளிகள், நான்காம் சுற்றில் 81 புள்ளிகள் எடுத்து அடுத்த சுற்று போட்டிக்கு அஜித்குமார் தகுதிபெற்றுள்ளார். இறுதிச்சுற்று வரும் சனிக்கிழமை நடக்க இருக்கிறது.
Tags:    

Similar News