சினிமா
விஜய்

பிகிலுக்கு விடைகொடுத்த பிரபல நடிகர்

Published On 2019-07-31 17:11 GMT   |   Update On 2019-07-31 17:11 GMT
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பிகில்’ படத்தில், தனது ஷூட்டிங்கை முடித்து விட்டதாக பிரபல நடிகர் கூறியிருக்கிறார்.
'பரியேறும் பெருமாள்' படத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு கதிர், விஜய்யுடன் இணைந்து 'பிகில்' படத்தில் நடித்து வருகிறார். அட்லீ இயக்கி வரும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், யோகி பாபு, 'மேயாத மான்' இந்துஜா, சவுந்தரராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.



இந்நிலையில் இந்த படம் குறித்து நடிகர் கதிர் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், என் மனது பேச விரும்புவதை இந்த புகைப்படம் பேசும். 'பிகில்' படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டேன். விஜய் அண்ணா, உங்கள் அரவணைப்பு எனக்கு மகிழ்ச்சி உணர்வையும், முடிவற்ற அன்பையும் எனக்கு அளித்தது. சிறப்பான தருணங்களுக்கு நன்றி. இதனை உண்மையாக்கிய அட்லி அண்ணாக்கு நன்றி’ என்று கூறியிருக்கிறார். 
Tags:    

Similar News