சினிமா
ராஷ்மிகா மந்தனா

பிற்காலத்தில் நான் வருத்தப்பட விரும்பவில்லை - ராஷ்மிகா

Published On 2019-07-30 11:49 GMT   |   Update On 2019-07-30 11:49 GMT
தெலுங்கில் மிகவும் பிரபலமாகி, தற்போது தமிழ் படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா, பிற்காலத்தில் நான் வருத்தப்பட விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்.
கன்னட நடிகையான ராஷ்மிகா தமிழ், தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் மூலம் ராஷ்மிகா தமிழுக்கு வந்துள்ளார். லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கும் தளபதி 64 படத்தில் ராஷ்மிகா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. 

தமிழில் நடிப்பது பற்றி ராஷ்மிகா கூறியதாவது: ’கமர்ஷியல் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றது. ஆனால் நான் தான் அதை ஒப்புக் கொள்வது இல்லை. நான் நடிக்கும் கதாபாத்திரம் வலுவானதாக இல்லை என்றால் மக்களின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அனைவருக்கும் ஈகோ உள்ளது. அதனால் நான் கமர்ஷியல் படங்களில் நடிக்க மறுப்பது இயக்குநர்களுக்கு நிச்சயம் பிடிக்காது. 



ஆனால் அவர்கள் ஒரு நிமிடம் என் நிலையில் இருந்து யோசித்தால் நான் ஏன் இப்படி செய்கிறேன் என்பது புரியும். நான் வெறும் பொம்மை இல்லை. நான் கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்தால் சில ஆண்டுகள் தான் தாக்குப்பிடிக்க முடியம். நான் எத்தனை ஆண்டுகள் இந்த துறையில் இருக்கிறேன் என்பதை தாண்டி நான் நடிக்கும் படங்களை நினைத்து பெருமைப்பட விரும்புகிறேன்.

கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேனே என்று பிற்காலத்தில் நான் வருத்தப்பட விரும்பவில்லை. ஒரு படத்திற்கு ஹீரோ போன்றே ஹீரோயினும் முக்கியமே. ஹீரோவும், ஹீரோயினும் ஒரே மாதிரி வேலை செய்தாலும் ஹீரோயின்கள் வெகுகாலம் நீடிப்பது இல்லை. நடிகை ஒருவர் 15 ஆண்டு காலம் திரைத்துறையில் நீடித்தாலும் அது ஒரே மாதிரி இருக்காது’. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
Tags:    

Similar News