சினிமா
மல்லிகா ஷெராவத்

கதாநாயகர்களுடன் நெருங்கி பழகாததால் வாய்ப்புகளை இழந்தேன் - மல்லிகா ஷெராவத்

Published On 2019-07-29 13:15 GMT   |   Update On 2019-07-29 12:57 GMT
கதாநாயகர்களுடன் நெருங்கி பழகாததால் வாய்ப்புகளை இழந்தேன் என்று பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் பேட்டி அளித்துள்ளார்.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர் மல்லிகா ஷெராவத். தமிழில் தசாவதாரம், ஒஸ்தி ஆகிய படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சியாக நடிப்பது மட்டும் அல்லாமல் பரபரப்பான பேட்டிகள் கொடுத்தும் பிரபலமானவர்.

ஹரியானாவை பூர்வீக மாக கொண்ட மல்லிகா ஷெராவத், மாடலிங் துறையில் இருந்து திரைத் துறைக்கு வந்தவர். 2002-ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். படங்கள் மட்டும் அல்லாமல் தற்போது இணைய தொடர்களிலும் களம் இறங்கியிருக்கிறார். மல்லிகா ஷெராவத் சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் பல அதிர்ச்சி தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். கதாநாயகர்களுடன் நெருங்கி பழக விரும்பாத ஒரே காரணத்திற்காக தான் பல பட வாய்ப்புகளை இழந்திருப்பதாக கூறியுள்ளார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எதிர்பார்த்தபடி அனுசரித்து செல்லாததால் பல படங்களிலிருந்து தான் தூக்கி எறியப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.



தன்னை இயக்குனர்களோ அல்லது தயாரிப்பாளர்களோ படுக்கைக்கு வா என நேரடியாக அழைக்க வில்லை. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி தான் இணங்கவில்லை என்றும், தான் தைரியமான பெண் என்பதால் பிரச்சனை வரும் என்பதால் தன்னை நேரடியாக யாரும் அணுகிய தில்லை என்றும் அவர் கூறினார்.

மீடு போன்ற இயக்கங்கள் தேவை என்று கூறியுள்ள மல்லிகா ஷெராவத், பெண்களை போன்று ஆண்களுக்கும் பாதுகாப்பான பணிச்சூழல் தேவை என்று வலியுறுத்தியுள்ளார். மீடூவால் பெண்களின் பாலியல் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தெரிவிக்கப்பட்டு பெண்களுக்கு ஆதரவான சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
Tags:    

Similar News