சினிமா
பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்
மணிரத்னம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பிரபல இயக்குனர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
செக்கச் சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்துள்ளனர்.
கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படமாக உருவாகி வருகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் விக்ரம் ஆதித்யா, கரிகாலனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், கீர்த்தி சுரேஷ் குந்தவையாகவும், ஜெயம் ரவி ராஜ ராஜ சோழனாகவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் தானும் இணைந்திருப்பதை நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே செல்வராகவன் இயக்கிய ’ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் அரசராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.