சினிமா
சமந்தா

சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய சமந்தா

Published On 2019-07-26 04:29 GMT   |   Update On 2019-07-26 04:29 GMT
‘ஓ பேபி’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை புரிந்ததையடுத்து நடிகை சமந்தா சம்பளத்தை உயர்த்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் கங்கனா ரணாவத் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.14 கோடி வாங்குகிறார். தீபிகா படுகோனே ரூ.13 கோடி பெற்று 2-வது இடத்தில் இருக்கிறார். தென்னிந்திய நடிகைகளில் நயன்தாரா முதல் இடத்தில் இருக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.5 கோடி கேட்பதாக தகவல். 

தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் தொடர்ந்து நயன்தாராவே நம்பர்-1 இடத்தில் இருக்கிறார். முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடிப்பதோடு தன்னை மட்டுமே முன்னிறுத்தும் கதைகளிலும் நடிக்கிறார். அவர் நடிப்பில் விரைவில் திரைக்கு வர உள்ள கொலையுதிர் காலம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை. தர்பார் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாகவும் பிகில் படத்தில் விஜய் ஜோடியாகவும் நடித்து வருகிறார். 



இந்த நிலையில் சமந்தாவும் தற்போது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். சமந்தா நடிப்பில் ‘ஓ பேபி’ தெலுங்கு படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படம் ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. இதனால் ரூ.2 கோடி வாங்கி வந்த அவர் இப்போது சம்பளத்தை ரூ.3 கோடியாக உயர்த்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமணத்துக்கு பிறகும் அவருக்கு மார்க்கெட் குறையவில்லை.
Tags:    

Similar News