சினிமா
குடும்பத்தினருடன் சேர்ந்து புகைபிடிக்கும் பிரியங்கா சோப்ரா

குடும்பத்துடன் புகைபிடித்து சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா

Published On 2019-07-22 09:18 GMT   |   Update On 2019-07-22 09:18 GMT
நடிகை பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்தினருடன் சேர்ந்து புகைபிடிக்கும் புகைப்படம் சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.
நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 18-ந்தேதி மியாமியில் ஒரு சொகுசு கப்பலில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருடன் கணவர் நிக் ஜோன்ஸ், தாய் மதுசோப்ரா ஆகியோரும் இருந்தனர். பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சில சமூக ஊடகங்களில் வைரலாக பரவியுள்ளது. இதனால் பிரியங்கா கிண்டல்களிலும் கேலிகளிலும் சிக்கியுள்ளார்.



அந்த படங்களில் பிரியங்கா சோப்ரா சிகரெட் புகைப்பதும், நிக் ஜோன்சும், மது சோப்ராவும் சிகார் புகைப்பதும் தெரிகிறது. இதை தொடர்ந்து பிரியங்கா சோப்ராவை சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது பிரியங்கா சோப்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், தீபாவளிக்காக பட்டாசுகளை வெடிக்காமல் இனிப்புகளையும், அன்பையும் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றும், பட்டாசுகளின் புகையால் ஆஸ்துமா நோயாளிகள் துன்புறுவதாகவும் தெரிவித்திருந்தார். அது மட்டும் அல்லாமல் தானே ஓர் ஆஸ்துமா நோயாளி எனவும், அதையும் கடந்து வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


அதன்பின் தனது திருமண விழாவுக்காக ஏராளமான பட்டாசுகளை வெடித்து நகரம் முழுவதும் புகை மண்டலமாகும் வகையில் கொண்டாடினார் பிரியங்கா. அப்போது அவரது இரட்டை வேடத்துக்காக சமூகவலைதளங்களில் விமர்சிக்கப்பட்டார். இந்த நிலையில், தான் ஓர் ஆஸ்துமா நோயாளி என கூறிவிட்டு சிகரெட் புகைப்பதை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதையும் சேர்த்து பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்தினரோடு புகைபிடிக்கும் படத்தை வைத்து கிண்டல் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News