சினிமா
கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ்

முதலில் ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்து கீர்த்தி சுரேஷ் - பிரபல இயக்குனரின் திட்டம்

Published On 2019-07-22 08:14 GMT   |   Update On 2019-07-22 08:14 GMT
முதலில் ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்து கீர்த்தி சுரேசை வைத்து படம் தயாரிக்க பிரபல இயக்குனர் ஒருவர் திட்டம் போட்டிருக்கிறார்.
பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்க்குரி, பேட்ட படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்க இருக்கிறார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இவர் மேயாத மான் என்ற படத்தை தயாரித்து இருந்தார். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள புதிய படத்தை தயாரிக்க இருக்கிறார். வேதாளம் சொல்லும் கதை படத்தை இயக்கிய ரதீந்திரன் ஆர்.பிரசாத் இந்த படத்தை இயக்குகிறார். இன்னும் வெளியாகாத வேதாளம் சொல்லும் கதை படத்திலும் ஐஸ்வர்யாவே நாயகியாக நடித்துள்ளார். 



இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் மற்றொரு படத்தையும் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கவிருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News