சினிமா
இயக்குனர் பாலாஜி மோகன்

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய இயக்குனர் பாலாஜி மோகன்

Published On 2019-07-22 13:00 IST   |   Update On 2019-07-22 12:43:00 IST
சமீபத்தில் தனுசை வைத்து மாரி 2 படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகன், புதிய பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
‘காதலில் சொதப்புவது எப்படி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி மோகன். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து, ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி, மாரி 2’ ஆகிய படங்களை இயக்கினார். சமீபத்தில் வெளியான மாரி 2 திரைப்படம் சூப்பர் ஹிட்டானது.



இந்நிலையில், ஓபன் விண்டோ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார் பாலாஜி மோகன். இதன் மூலம் தயாரிக்கும் முதல் படத்தின் அறிவிப்பை நாளை வெளியிட இருப்பதாக பாலாஜி மோகன் கூறியிருக்கிறார்.

Similar News