சினிமா
வடசென்னை 2 உருவாகும்- தனுஷ் அறிவிப்பு
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான வடசென்னை திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகும் என தனுஷ் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான வடசென்னை திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து இப்படத்தின் 2-ம் பாகம் வெளியாகும் என கூறப்பட்டது.
ஆனால் தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்ததால், வடசென்னை படத்தின் 2-ம் பாகம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவின. இந்நிலையில், தனுஷ் ஒரு டுவீட்டை பதிவிட்டு ரசிகர்களை தெளிவுபடுத்தியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:- “என் ரசிகர்களிடையே இந்தக் குழப்பம் ஏற்பட காரணம் எதுவென்று தெரியவில்லை. வடசென்னை 2-ம் பாகம் உருவாகும். அப்படி ஏதேனும் மாற்றம் இருந்தால் நானே எனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவிப்பேன். அதுவரை எனது படங்கள் குறித்த எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம், நன்றி, லவ் யூ.” என்று பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம் வடசென்னை படத்தின் 2-ம் பாகம் உருவாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தனுஷின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.