சினிமா
ரஜினி

தர்பார் படத்தில் ரஜினிக்கு 3 வில்லன்கள்

Published On 2019-07-14 09:49 GMT   |   Update On 2019-07-14 09:49 GMT
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் 3 வில்லன்கள் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு திரைக்கதையில் வலுவான எதிர்ப்பு கொடுக்க பல வில்லன்களை தயார் செய்துள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். பல பாலிவுட் நடிகர்கள் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர்.

பாலிவுட்டில் இஷாக், பாஹி 2 ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பிரதீக் பாபர் தர்பார் படத்தில் இணைந்தார். சுனில் ஷெட்டி, பிரதீக் பாபரின் தந்தை வேடத்தில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்திவருகிறார். இவர்களைத் தொடர்ந்து நவாப் ஷாவும் வில்லன் பாத்திரத்தில் இணைந்துள்ளார்.



டைகர் ஸ்ண்டாகை படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றவர் நவாப் ஷா. அனிருத் இசையில் உருவாகும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்கு பின் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 

இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகி ஹிட் அடித்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி தர்பார் திரைக்கு வரவுள்ளது.
Tags:    

Similar News