சினிமா
சதீஷ்

கொரில்லாவிடம் அடி வாங்கிய சதீஷ்

Published On 2019-07-11 11:24 GMT   |   Update On 2019-07-11 11:47 GMT
டான் சாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொரில்லா’ படத்தின் படப்பிடிப்பின் போது, குரங்கிடம் அடி வாங்கியதாக காமெடி நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கொரில்லா’. இதில் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

நடிகர் ராதாரவி இதில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ஆர் பி குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். படதொகுப்பை ரூபன் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டான் சாண்டி.



இப்படம் நாளை திரைக்கு வருகிறது. இப்படத்தில் குரங்கு ஒன்று நடித்துள்ளது. படப்பிடிப்பின் போது, குரங்கிடம் அடி வாங்கியதாக சதீஷ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Tags:    

Similar News