சினிமா
சுருதிஹாசன்

திருமண செய்திகளால் சுருதிஹாசன் வருத்தம்

Published On 2019-07-11 09:56 GMT   |   Update On 2019-07-11 09:56 GMT
விஜய்சேதுபதி ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வரும் சுருதிஹாசன், சமூக வலைதளங்களில் தன்னை பற்றி பரவி வரும் திருமண செய்திகளால் வருத்தம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சினிமாவுக்கு சின்ன இடைவெளிவிட்டு இருந்த சுருதிஹாசன் தற்போது விஜய்சேதுபதி ஜோடியாக ’லாபம்’ படத்தில் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- ‘சமூக வலைதளங்களில் என்னை கிண்டல் செய்வது, விமர்சிப்பது என்னை பாதிப்பது இல்லை. ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. அதன் பிறகு அது பெரிதாக தெரியவில்லை. 

சமீபத்தில் யாரும் என்னை கிண்டல் செய்யவில்லை. ஆனால் பலர் சுருதிக்கு திருமணம், அவர் குண்டாகிவிட்டார் என்று தெரிவித்துள்ளனர். அப்பொழுது எனக்கு வருத்தமாக இருந்தது. எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது என்பது எனக்கு தெரியும். கடந்த 10 ஆண்டுகளில் நான் எனக்காக நேரம் ஒதுக்கவில்லை, என்னை கவனித்துக் கொள்ளவில்லை. 



எனக்கு அன்பு, அமைதி தேவைப்பட்டது. விமர்சனங்கள் என்னை பாதிப்பது இல்லை. ஏனென்றால் அனைவருக்கும் அவரவர் வாழ்க்கை மிகவும் முக்கியம் என்பதை புரிந்து கொண்டுள்ளேன். பாலிவுட்டில் நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்’. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News