சினிமா
வைரமுத்து

கே.பாலச்சந்தரின் சாதனைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்- வைரமுத்து

Published On 2019-07-10 12:06 GMT   |   Update On 2019-07-10 12:06 GMT
கே.பாலச்சந்தரின் சாதனைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு பாடலாசிரியர் வைரமுத்து கோரிக்கை வைத்துள்ளார்.
கே. பாலச்சந்தரின் உதவியாளர் மோகன் நடத்திய கே.பி. 90 நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், சினிமா நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து பேசியதாவது: ‘ஒரு இசை அமைப்பாளருடன் இணைந்து பல ஆண்டுகள் பணி யாற்றினேன். ஒரு நிலையில் அந்த இசை அமைப்பாளருடன் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது . என்ன செய்வது என்று அறியாமல் ஏழு ஆண்டுகள் இருந்தேன். காரணம் நான் பிரிந்த அந்த இசை அமைப்பாளரின் திறமையும் ஆளுமையும் பெரியது .

அந்த ஏழு ஆண்டு களில் ஒரு நல்ல இசை அமைப்பாளரை உருவாக்குவோம் என்று எண்ணி 37 இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றினேன். யாரும் சோபிக்கவில்லை. அந்த நிலையில் ஒரு நாள் பாலச்சந்தரிடம் இருந்து அழைப்பு வந்தது. போனால் திலீப் என்ற புது இசை அமைப்பாளர். பாலச்சந்தரின் மூன்று படங்களுக்கு என் பாடல். திலீப்பின் இசை. 



மூன்று படத்திலும் பாடல்கள் ஹிட். திலீப்தான் ஏ ஆர் ரகுமான். மீண்டும் களம் எனக்கு வந்தது. திரையுலகில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா, மீட்டெடுத்தவர் பாலச்சந்தர். புன்னகை மன்னன் படத்தில், என்ன சத்தம் இந்த நேரம், பாடலில் ஆதரவாய் சாய்ந்து விட்டாள் ஆரிரரோ பாடு, என்ற வரிகளின் கேமராவை தாலாட்டிய தொழில்நுட்ப மேதை அவர். 

பாலச்சந்தரின் சாதனைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அதை அரசே செய்ய வேண்டும். பாலச்சந்தர் மட்டுமல்ல பல சாதனையாளர்களின் சாதனைகளும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அது பாலச்சந்தரில் இருந்து துவங்க வேண்டும்’’

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News