சினிமா
முதலைகள்

2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட தமிழ் படம்

Published On 2019-07-05 11:17 GMT   |   Update On 2019-07-05 11:17 GMT
இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து 'ஆண்கள் ஜாக்கிரதை' என்ற தமிழ் படம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இனணந்து தயாரித்துள்ள படம் 'ஆண்கள் ஜாக்கிரதை'. இந்த படத்தை முத்து மனோகரன் இயக்கியுள்ளார். 

இந்த படம் குறித்து இயக்குனர் கூறுகையில், 'இது ஒரு வித்தியாசமான திரில்லர் படம். அளவுக்கு அதிகமான சுதந்திரம் பெண்களையும் தவறு செய்ய தூண்டும். அதனால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. 



இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் இது. ஒரு கோடிக்கு அதிகமாக செலவிட்டு  2000 முதலைகளை 15 நாட்களாக ஒரே இடத்தில் வைத்து அவைகளுக்கு உணவாக சிக்கன், மாட்டிறைச்சி போன்றவற்றை டன் கணக்கில் போட்டு அவைகளை தண்ணீருக்குள் இருந்து வெளியே வரவைத்து மிகவும் சிரமப்பட்டு எடுத்தோம்.



கிளைமாக்ஸ் காட்சியில் அனைத்து முதலைகளும் ஒன்றாக சேர்ந்து வருவது போல் ஒரு காட்சி இருக்கிறது அந்த காட்சியை திரையில் பார்க்க படு பயங்கரமாக இருக்கும் அதுதான் இந்த படத்தின் ஹைலைட் காட்சி என்றார் இயக்குனர்.

இந்த படத்தில் முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ஐஸ்வர்யா, மஹிரா,ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடிக்கிறார்கள்.  படம் விரைவில் வெளியாக உள்ளது.
Tags:    

Similar News