சினிமா
சசிகுமார்

சும்மா விடுவானா பெரியவர் மகன் - கொம்பு வச்ச சிங்கம்டா டீசர்

Published On 2019-07-03 12:48 GMT   |   Update On 2019-07-04 04:37 GMT
சுந்தரபாண்டியன் படத்தை தொடர்ந்து மீண்டும் சசிகுமார் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் கூட்டணி இணைந்திருக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். சசிகுமார் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, இனிகோ பிரபாகரன், சௌந்தரராஜா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார். 2012ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. 

இப்படத்தை தொடர்ந்து, இது கதிர்வேலன் காதல், சத்ரியன் ஆகிய படங்களை இயக்கி இருந்தார். தற்போது ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தை இயக்கி வருகிறார். சசிகுமார் - மடோனா செபஸ்டியன் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.



இந்நிலையில் இப்படத்தின் டீசரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டனர். இதில் சசிகுமாரின் பின்னணியில் ‘சும்மா விடுவானா பெரியவர் மகன்’ என்ற வசனம் இடம் பெற்றிருக்கிறது. அந்த ஒரு வசனமே படத்தை பார்ப்பதற்கான ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. தற்போது இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Tags:    

Similar News