சினிமா
வனிதா

வெளியே வந்ததும் முழு விசாரணைக்கும் ஒத்துழைப்பு தருகிறேன் - வனிதா

Published On 2019-07-03 12:12 GMT   |   Update On 2019-07-03 12:31 GMT
குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்ய வந்த போலீசாரிடம் வெளியே வந்ததும் முழு விசாரணைக்கும் ஒத்துழைப்பு தருகிறேன் என்று நடிகை வனிதா கூறியிருக்கிறார்.
நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார், ஆனந்தராஜ் என்பவரை கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஜெனிதா என்ற மகள் உள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக வனிதாவும், ஆனந்தராஜூம் பிரிந்து விட்டனர். இதன் பின்னர் ஆனந்தராஜ் தெலுங்கானா மாநிலத்தில் மகள் ஜெனிதாவுடன் வசித்து வந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் ஜெனிதா திடீரென மாயமானார். இதுபற்றி அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஆனந்தராஜ் புகார் அளித்தார். அதில் தனது மகள் ஜெனிதாவை, வனிதா கடத்திச் சென்று விட்டதாக கூறி இருந்தார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.



இந்த நிலையில், வனிதா விஜயகுமார், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பது போலீசுக்கு தெரிய வந்தது. இதை தொடர்ந்து ஆனந்தராஜ், தெலுங்கானா போலீசாருடன் சென்னை வந்தார். மகளை மீட்டு செல்வதற்காக பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டை பொழுது போக்கு பூங்கா வளாகத்தில் போடப்பட்டுள்ள பிக்பாஸ் அரங்குக்குள் சென்று வனிதாவிடம் போலீசார் விசாரணை முயற்சி செய்தனர். 

வழக்கறிஞர் மூலம் தெலுங்கான போலீசாரின் விசாரணைக்கு வனிதா ஒத்துழைப்பு கொடுத்தார். பின்னர் நான் வெளியே வந்ததும் முழு விசாரணைக்கு ஒத்துழைப்பு தருகிறேன் என்று காணொளி மூலம் போலீஸ் விசாரணைக்கு பதிலளித்திருக்கிறார்.
Tags:    

Similar News