சினிமா
ராணா

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராணா

Published On 2019-07-03 09:31 GMT   |   Update On 2019-07-03 09:31 GMT
பிரபல இயக்குனர் இயக்கும் மல்டி ஸ்டார் படத்தில் நடிக்க இருப்பதாக பரவி வந்த செய்தி வதந்தி எனக்கூறி ராணா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குனர் பா.ரஞ்சித். இவர் அண்மையில் ராஜராஜ சோழன் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார். 

இதையடுத்து அவர் 3 ஹீரோக்களை வைத்து மல்டி ஸ்டார் படம் இயக்க உள்ளதாகவும், அதில் ராணா, ஆர்யா, சத்யராஜ் நடிக்க இருப்பதாக்கவும் செய்திகள் பரவின. 



இந்நிலையில், ராணா இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதன்மூலம் பா.ரஞ்சித் படத்தில் நடிக்க இருப்பதாக பரவி வந்த வதந்திக்கு ராணா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பாகுபலி படத்தில் நடித்து பிரபலமான ராணா தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். 
Tags:    

Similar News