சினிமா

சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 3 உருவாகிறது

Published On 2019-05-02 05:23 GMT   |   Update On 2019-05-02 05:23 GMT
சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மூன்றாவது பாகத்தை எடுக்கும் முயற்சியில் சுந்தர்.சி இறங்கி உள்ளார். #Aranmanai3 #SundarC
வெற்றி பெறும் படங்களின் இரண்டாம் பாகங்களை எடுப்பது டிரெண்டாகவே மாறிவிட்டது. ஆனால் அப்படி எடுக்கப்படும் படங்களில் பெரும்பாலான படங்களின் இரண்டாம் பாகங்களுக்கு போதிய வரவேற்பு கிடைப்பதில்லை.

தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் தயாராகின்றன. ரஜினிகாந்தின் எந்திரன் படம் 2.0 என்ற பெயரில் இரண்டாம் பாகமாக வந்தது. அஜித்குமாரின் பில்லா படமும் 2 பாகங்கள் வந்தன. சூர்யாவின் சிங்கம் படத்துக்கு வரவேற்பு இருந்ததால் தொடர்ச்சியாக அந்த படத்தின் 3 பாகங்கள் வந்துள்ளன.

லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா படம் வசூல் குவித்ததால் அதன் மூன்றாம் பாகம் இப்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. வேலை இல்லா பட்டதாரி, சண்டக்கோழி உள்ளிட்ட படங்களும் 2 பாகங்கள் வந்தன. தற்போது இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. 



சுந்தர்.சி இயக்கிய அரண்மனை பேய் படம் 2 பாகங்கள் வந்துள்ளன. அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் சுந்தர்.சி இறங்கி உள்ளார். ஏற்கனவே கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தையும் சுந்தர்.சி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஷால், தமன்னா நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இதன் பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளன. இந்த படம் முடிந்ததும் அரண்மனை 3-ம் பாகம் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. அரண்மனை 2-ம் பாகத்தில் நடித்த திரிஷா, ஹன்சிகா ஆகியோர் 3-ம் பாகத்திலும் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Aranmanai3 #SundarC

Tags:    

Similar News