சினிமா
சிம்பு திருமணம் பற்றிய கேள்வி - டி.ராஜேந்தர் கண்ணீர்
நடிகர் சிம்புவின் திருமணம் குறித்த நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த டி.ராஜேந்தர், சிம்பு திருமணம் இறைவன் அருளால் விரைவில் நடக்கும் என்று கண்ணீருடன் தெரிவித்தார். #STR #TRajender
இயக்குனர் மற்றும் நடிகர் டி.ராஜேந்தரின் இளைய மகனும் சிம்புவின் தம்பியுமான குறளரசன் தனது நெடுநாள் தோழி நபீலா அகமதுவை கடந்த ஏப்ரல் 26-ந் தேதி திருமணம் செய்தார்.
தமிழ்நாட்டின் முக்கியப் பிரமுகர்களை திருமணத்துக்காக டி.ராஜேந்தர் அழைத்திருந்தார். இது தொடர்பாக நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அரசியல் கேள்விகளுக்கு தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பதில் அளிப்பதாக கூறினார்.
சிம்பு திருமணம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த டி.ராஜேந்தர், ’இந்த கேள்வியை கேட்கும்படி வைத்த விதியின் மீதும், கடவுளின் மீதும் கோபப்படுறேன். சிம்பு திருமணம் விரைவில் இறைவன் அருளால் நடக்கும்’ என்று கண்ணீருடன் தெரிவித்தார். #STR #TRajender