சினிமா

ஆர்.கே.நகர் ரிலீஸ் தள்ளிவைப்பு - படத்தில் அரசியல் இல்லை என வெங்கட் பிரபு வருத்தம்

Published On 2019-04-09 08:16 GMT   |   Update On 2019-04-09 08:16 GMT
சரவண ராஜன் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஆர்.கே.நகர்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார் #RKNagar #Vaibhav
பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பில் வெங்கட் மற்றும் ஷ்ரத்தா என்டர்டெயின்மெண்ட் சார்பில் பத்ரி கஸ்தூரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `ஆர்.கே.நகர்'. சரவண ராஜன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைபவ் நாயகனாகவும், சனா அல்தாஃப் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இனிகோ பிரபாகரன், சம்பத் ராஜ், அஞ்சனா கீர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், டி.சிவா, ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படம் ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளதாக வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

சில தவிர்க்க முடியாத காரணங்கள், செய்யாத தவறுக்காக, நாங்கள் நிறைய பிரச்சனையை சந்திக்கிறோம். தேர்தலுக்கு பிறகு தான் படம் ரிலீசாகும் என்று என்று சொல்கிறார்கள். சம்பந்தப்பட்ட யாரையும் குறிப்பிட விரும்பவில்லை, படம் ரிலீசாகும் போது உங்களது ஆதரவை கொடுக்க வேண்டும். பிரச்சனை விரைவில் சரியாகும்.. இந்த படத்தில் கண்டிப்பாக அரசியல் இல்லை. யாரையும் குறிப்பிட்டு இந்த படத்தை உருவாக்கவில்லை. இது ஒரு ஜனரஞ்சகமான படம், எனவே தல பாணியில் சொல்ல வேண்டும் என்றால், வாழு, வாழவிடு. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரேம்ஜி அமரன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு வெங்கடேஷ்.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன்.கே.எல். படத்தொகுப்பையும், விதேஷ் கலை பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். #RKNagar #Vaibhav

Tags:    

Similar News