சினிமா

நடிப்பில் இருந்து தயாரிப்புக்கு திரும்பிய நடிகை

Published On 2019-04-03 18:45 IST   |   Update On 2019-04-03 18:45:00 IST
நெசவுக்கலையின் அவசியத்தை உணர்த்தும் வகையில், தறி என்ற தொடரை தயாரிப்பதாக நடிகை லலிதா குமாரி கூறியுள்ளார். #LalithaKumari
கே.பாலசந்தர் இயக்கிய `மனதில் உறுதி வேண்டும்' படத்தில் நடிகையாக அறிமுகமானவர் லலிதா குமாரி. இவர் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார். நீண்ட காலமாக நடிப்பில் இருந்து விலகி இருந்த லலிதா குமாரி தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் ‘தறி’ என்ற தொடரை தயாரிக்கிறார்.

இது குறித்து லலிதா குமாரி பேசுகையில், “நெசவாளர் சமூகத்தின் உண்மையான சாரத்தையும், அவர்களது சவால்களையும் நேர்த்தியாக படம்பிடித்திருக்கிறோம். தறி தொடருக்காக இரண்டு வாரங்கள் நெசவாளர்களுடன் தங்கி, அவர்கள் எப்படி நூல் எடுக்கிறார்கள், எப்படி நூலை காய வைக்கிறார்கள், எப்படி கலர் பூசுகிறார்கள், பட்டு நூலை எப்படி காயவைத்து பிரிக்கிறார்கள் என்பதை அறிந்து, அங்கிருக்கும் மக்களிடம் நேர்காணல் செய்துதான் இந்த கதையை உருவாக்குகிறோம்.



இந்த கதையின் வழியாக நெசவுக்கலை மீது மக்களது கவனமும், அக்கறையும் திரும்பும் என்று உறுதியாக நம்புகிறோம். பாரம்பரியமான நெசவு தொழிலை பாதுகாக்கும் அவசியத்தை இந்த நிகழ்ச்சி வலியுறுத்தும் என்றார். #LalithaKumari #Thari

Similar News