சினிமா

எனக்கும் காதலன் இருக்கிறார், நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன் - கங்கனா ரனாவத்

Published On 2019-03-07 06:56 GMT   |   Update On 2019-03-07 06:56 GMT
கங்கனா ரனாவத்திடம் அவரது காதல் பற்றி கேட்டபோது, தனக்கும் ஒரு காதலர் இருக்கிறார் என்றும் திருமணம் பற்றி கேட்டதற்கு நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார். #KanganaRanaut
தமிழ், இந்தி படங்களில் நடித்து வரும் நடிகை கங்கனா ரனாவத், சமீபத்தில் ஜான்சி ராணி கதையாக உருவான மணிகர்ணிகா படத்தில் ஜான்சி ராணி வேடம் ஏற்று நடித்ததுடன் அந்த படத்தின் இயக்குனர் பொறுப்பும் ஏற்றார்.

இதனால் ஏற்கனவே அந்த படத்தை இயக்கி வந்த கிரிஷுடன் மோதல் ஏற்பட்டது. அந்த பிரச்னை ஒருவழியாக முடிவுக்கு வந்ததையடுத்து தனது அடுத்த படங்களில் கவனத்தை திருப்பி இருக்கிறார்.

கங்கனா ரனாவத் முதலில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோ‌ஷனை காதலித்தார். அவருடன் டேட்டிங்கிலும் ஈடுபட்டிருந்தார். ஒருமுறை தனது காதலை கங்கனா வெளிப்படையாக அறிவித்த போது அதை ஹிருத்திக் ஏற்க மறுத்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே பெரிய சர்ச்சை வெடித்தது. ஹிருத்திக் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் புகார் அளித்தார்.



இந்த பிரச்சினை முடிவுக்கு வராமலேயே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தற்போது கங்கனாவின் வாழ்வில் புதிய காதலன் வந்து இருக்கிறார். இந்தி பத்திரிகைகள் இது பற்றி எழுதி வந்தன. அவர் யார் என்ற கேள்விக்கு கங்கனாவே பதில் அளித்துள்ளார்.

நான் என்றைக்குமே காதலைவிட்டு விலகி இருந்ததில்லை. கடந்த காலங்களில் பிரேக் அப், காதல் தோல்விகள் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஆனாலும் அதில் இருந்து நான் உடனே நகர்ந்து அடுத்த கட்டத்துக்கு சென்றுவிடுவேன். தற்போதைக்கு காதலிக்கிறீர்களா என்கிறார்கள். என் வாழ்வில் தற்போது ஒரு காதலன் இருக்கிறார்.

டேட்டிங் செல்வதற்கு ஒருவர் வேண்டும் என்பதற்காக அல்ல, என் வாழ்வில் எனக்கு பொருத்தமான ஒரு நபர் இருக்க வேண்டும். அதன் மூலம் என் வாழ்வை நான் சரியாக வழி அமைத்துக் கொள்வேன்.

திருமணம் பற்றி கேட்கிறார்கள். நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன். இந்தியாவில் ஒரு புறம் அதிகரித்து வரும் மக்கள் தொகை எண்ணிக்கை எனக்கு கவலை அளித்தாலும், எனக்கும் குழந்தை குடும்பம் வேண்டும் என்ற ஆசை உள்ளது.

இவ்வாறு கங்கனா ரனாவத் கூறினார். #KanganaRanaut

Tags:    

Similar News