சினிமா

பாலிவுட் இயக்குநருடன் கைகோர்த்த பா.இரஞ்சித்

Published On 2019-03-06 07:23 GMT   |   Update On 2019-03-06 07:23 GMT
காலா படத்தை தொடர்ந்து இயக்கம், தயாரிப்பு என இரண்டையும் கவனித்து வரும் பா.இரஞ்சித், அடுத்ததாக பாலிவுட் இயக்குநர் ஜோதிநிஷாவுடன் இணைந்திருக்கிறார். #BRAmbedkarNowandThen #PaRanjith
அடுத்த படம் பற்றிய அறிவிப்பை பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்திற்காக மும்பையைச் சேர்ந்த இயக்குநர் ஜோதிநிஷாவுடன் ரஞ்சித் கூட்டணி அமைத்துள்ளார். கிரவுட் பண்டிங் மூலம் நிதி திரட்டி இப்படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக 60 நாட்களில் சுமார் ரூ.60 லட்சத்தை திரட்ட இரு இயக்குநர்களும் முயற்சித்து வருகின்றனர். இப்படம் வரலாறு படைக்கும் எனவும், இப்படத்தில் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீலம் ப்ரொடக்‌‌ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த கூட்டணியை அறிவிக்கிறோம் ஜோதிநிஷாவின் முதல் படமான ‘பி.ஆர்.அம்பேத்கர் நவ் அண்ட் தென்’ இப்படம் வரலாறு படைக்கும். இப்படத்தில் பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். #BRAmbedkarNowandThen #PaRanjith

Tags:    

Similar News