சினிமா

ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி

Published On 2019-02-15 14:02 GMT   |   Update On 2019-02-15 14:02 GMT
ஆர்யா, சாயிஷா திருமணம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், இவர்களது திருமணம் காதல் திருமணம் அல்ல என்றும் இருவீட்டாரும் சேர்ந்து பேசி முடிவு செய்தது என்றும் சாயிஷாவின் அம்மா கூறினார். #Arya #Sayyeshaa
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுள் ஆர்யாவும் ஒருவர். பூஜா, நயன்தாரா, அனுஷ்கா என பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட ஆர்யாவுக்கு அவரது பெற்றோர் நீண்ட காலமாக பெண் பார்த்து வந்தனர்.

ஆர்யா தன்னுடன் கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்த சாயிஷாவை காதலிப்பதாகவும், திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வந்தன. இந்த செய்தியை காதலர் தினமான நேற்று ஆர்யா உறுதி செய்தார். அவரது டுவிட்டர் பக்கத்தில் வரும் மார்ச் மாதம் ‘நானும் சாயிஷாவும் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம்‘ என்று குறிப்பிட்டு இருக்கிறார். சாயிஷாவுடன் சேர்ந்து எடுத்த படம் ஒன்றையும் பதிவிட்டார். இதே பதிவை சாயிஷாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



இதுகுறித்து சாயிஷாவின் அம்மா ஷாஹீனியிடம் கேட்டபோது, “எங்களுக்கு இந்த திருமணத்தில் முழு ஈடுபாடு இருக்கிறது. இந்த இனிய நாளில் எங்கள் குடும்பத்தினருக்கும், ஆர்யா குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அவரது டுவீட் இருந்தது. இது காதல் திருமணம் என்று பலரும் நினைத்து இருப்பார்கள். உண்மையில் இது இரு குடும்பத்தார்களும் சேர்ந்து எடுத்த முடிவு.

ஆர்யாவின் குடும்பத்தினருக்கு சாயிஷாவை பிடித்துப்போக அவர்கள் திருமணத்திற்கு அணுகினார்கள். எங்களுக்கும் ஆர்யா போல் ஒருவர் என் மகளை திருமணம் செய்துகொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் தற்போது நாங்கள் அனைவரும் அதற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்“ என்று கூறினார். சாயிஷா பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமாரின் பேத்தி ஆவார். #Arya #Sayyeshaa #AryaSayyeshaa

Tags:    

Similar News