சினிமா

மணிகர்னிகா பட சர்ச்சை - கங்கனா ரணாவத் - கிரிஷ் இடையே மோதல் முற்றுகிறது

Published On 2019-01-31 09:43 GMT   |   Update On 2019-01-31 09:43 GMT
மணிகர்னிகா பட சர்ச்சையில் நடிகை கங்கனா ரணாவத் - இயக்குநர் கிரிஷ் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இரு தரப்பினரும் ட்விட்டரில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். #Manikarnika #KanganaRanaut #Krish
கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மணிகர்னிகா’. கங்கனா ஜான்சி ராணியாக நடித்துள்ள இந்த படத்தை கிரிஷ் மற்றும் கங்கனா ரணாவத் இருவரும் இயக்கியுள்ளனர். இந்த படம் வெளியான 5 நாட்களில் ரூ.52 கோடி வசூல் செய்துள்ளது.

இயக்குனர் கிரிஷ் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்து கொடுத்துவிட்டு தான் பாலகிருஷ்ணா நடித்த ‘என்.டி.ஆர்’ படத்தை இயக்கினார். கங்கனா சில காட்சிகளை மட்டும் திரும்ப படப்பிடிப்பு செய்து சேர்த்தார். அதனால் தன் பெயரையும் இயக்குனர் பட்டியலில் சேர்த்துக் கொண்டார்.



‘மணிகர்னிகா’ படம் வெளியான உடன், பலரும் கங்கனா இயக்கம் மற்றும் நடிப்பு பிரமாதம் எனக் குறிப்பிட்டார்கள். இது தொடர்பாக கிரிஷ் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையாக மாறியது. தற்போது கங்கனா தரப்பும், கிரிஷ் தரப்பும் டுவிட்டர் பக்கத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். #Manikarnika #KanganaRanaut #Krish

Tags:    

Similar News