சினிமா

வடசென்னை படத்தில் ஆபாச வசனங்கள் - வெற்றிமாறன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்

Published On 2018-10-22 08:26 GMT   |   Update On 2018-10-22 08:26 GMT
‘வடசென்னை’ படத்தில் ஆபாச வசனங்கள் இடம்பெற்றிருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #VadaChennai #Dhanush #Vetrimaran
டைரக்டர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ‘வடசென்னை’ படம் சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படம் ரவுடிகளுக்குள் ஏற்படும் மோதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் ஆபாச வசனங்கள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

தனுஷ் நடித்துள்ள ‘வடசென்னை’ படத்தில் ஆபாச வசனங்கள் நிறைய உள்ளன. முகம் சுழிக்கும் வகையில் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.



சமூக அக்கறை இல்லாமல் பார்வையாளர்களின் மனதை புண்படுத்தி காயப்படுத்தும் நோக்கில் இயக்குனர் வெற்றிமாறனால் வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.

பொது இடத்தில் ஆபாச வார்த்தைகள் பேசுவது, பாடுவது போன்றவை இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் குற்றமாகும்.

எனவே தவறு என்று தெரிந்தே வசனங்கள் எழுதிய இயக்குனர் வெற்றிமாறன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #VadaChennai #Dhanush #Vetrimaran

Tags:    

Similar News