சினிமா
ஓட்டல் ஊழியர்களிடம் ஆர்ப்பாட்டம் செய்த ஆத்மிகா
பேய் இருப்பதாக நம்பி தான் தங்கி இருந்த ஓட்டல் ஊழியர்களிடம் நரகாசூரன் நடிகை ஆத்மிகா ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார். #Aathmika
‘துருவங்கள் பதினாறு’ பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி உள்ள திரைப்படம் நரகாசூரன். சஸ்பென்ஸ் திரில்லர் வகை படமான இதில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சந்தீப் கிஷன் பேசியதாவது “கதையே கேட்காமல் நான் ஒப்புக்கொண்ட முதல் படம் நரகாசூரன். நான் பொறியியல் படிப்பில் சேர்ந்துவிட்டு பின்னர் நடிகனாக போகிறேன் எனக் கூறி பாதியில் நின்றபோது, படிக்காமல் இருக்கதான் நான் இந்த காரணத்தை கூறுகிறேன் என என் பெற்றோர் நினைத்தனர். ஆனால் நான் தற்போது நடிகனாக இருப்பதை நினைத்து அவர்கள் பெருமைபடுகின்றனர். நல்லவேளை அன்று நீ எனது பேச்சை கேட்கவில்லை என்று என் தந்தை கூறினார்.
கார்த்திக் நரேன் ஒரு பெர்பெக்ட்டான இயக்குனர். மிக தெளிவாக திரைக்கதையை உருவாக்கி எங்களிடம் வேலை வாங்கினார். படப்பிடிப்பின் போது நானும் இந்திரஜித்தும் சேர்ந்து நடிகை ஆத்மிகாவை கிண்டல் செய்து கொண்டே இருந்தோம். ஒரு நாள் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் பேய் இருப்பதாக கிளப்பிவிட்டோம்.
அதை நம்பி பயந்துபோன அவர் ஓட்டல் ஊழியர்களை எல்லாம் வரவழைத்து ஆர்ப்பாட்டம் செய்துவிட்டார். படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார். நரகாசூரன் படம் வரும் 31 ம் தேதி வெளியாக இருக்கிறது.