சினிமா

சுந்தர்.சி-க்கு இரண்டு கதாநாயகிகளா?

Published On 2018-07-05 08:15 GMT   |   Update On 2018-07-05 08:15 GMT
முன்னணி நடிகராக இருக்கும் சுந்தர்.சி அடுத்ததாக கதாநாயகனாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். #SundarC
‘உள்ளத்தை அள்ளித்தா’, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், ‘தலைநகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடம் வெற்றி பெறவே தொடர்ந்து, ‘வீராப்பு, சண்டை, பெருமாள், உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

மேலும் தான் இயக்கிய அரண்மனை, அரண்மனை 2 படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் ‘கலகலப்பு 2’ படம் வெளியாகி வெற்றி பெற்றது. அடுத்ததாக அதிக பொருட் செலவில் உருவாக இருக்கும் ‘சங்கமித்ரா’ படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

இந்நிலையில், மீண்டும் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இவர் கதாநாயகனாக நடிக்க இருக்கும் படத்தை வி.இசட்.துரை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக இரண்டு முன்னணி கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். தற்போது ஊட்டியில் போலீஸ் நிலையம் போல் செட் அமைத்து வருகிறார்கள். இந்த மாதத்தின் இறுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

வி.இசட்.துரை இதற்கு முன் அஜித்தை வைத்து ‘முகவரி’, சிம்புவின் ‘தொட்டி ஜெயா’, பரத்தின் ‘நேபாளி’, ஷாமின் ‘6 மெழுகுவர்த்திகள்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News