சினிமா

டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தர் மகன் மரணம்

Published On 2016-06-08 05:18 GMT   |   Update On 2016-06-08 05:18 GMT
டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தர் மகன் மரணம் அமெரிக்காவில் மரணம் அடைந்தார்.
‘அன்பே வா,’ ‘தெய்வமகன்,’ ‘பாபு,’ ‘எங்கிருந்தோ வந்தாள்,’ ‘பத்ரகாளி’ உள்பட பல படங்களை டைரக்டு செய்தவர், ஏ.சி.திருலோகசந்தர். இவருக்கு ராஜ்சந்தர், பிரேம் திரிலோக் என்ற 2 மகன்களும், மல்லி சீனிவாசன் என்ற ஒரு மகளும் உண்டு. இவர்களில் பிரேம் திருலோக் அமெரிக்காவில் இருந்தார். பாஸ்டன் நகரை சேர்ந்த ஒரு அமெரிக்க பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டு கடந்த 30 வருடங்களாக அங்கேயே வசித்து வந்தார்.

பாஸ்டன் நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருந்த பிரேம் திருலோக், புற்று நோயினால் பாதிக்கப்பட்டார். கடந்த 2½ வருடங்களாக அவர் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47.

மரணம் அடைந்த பிரேம் திருலோக் மனைவி பெயர், லியான். இவர்களுக்கு ஸ்லோன், ஜேடன் என்ற 2 மகள்கள் இருக்கிறார்கள். பிரேம் திருலோக்கின் உடல் அடக்கம் அமெரிக்காவிலேயே நடக்கிறது.

Similar News