இது புதுசு
ஸ்கோடா எலெக்ட்ரிக் கார்

ஸ்கோடா எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2022-01-07 08:12 GMT   |   Update On 2022-01-07 08:12 GMT
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


ஸ்டோகா ஆட்டோ இந்தியா நிறுவனம் கோடியக் எஸ்.யு.வி. மாடலை ஜனவரி 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஸ்லேவியா மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

பெட்ரோல் வாகனங்கள் மட்டுமின்றி ஸ்கோடா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் இந்திய சந்தையில் ஸ்கோடாவின் முதல் எலெக்ட்ரிக் கார் 2023 ஆண்டு எப்.பி.யு. (ஃபுல்லி பில்ட் யூனிட்) வடிவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.



'என்யாக் மாடலை அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறோம். இது வரிகள் சேர்த்து பிரீமியம் மாடலாக அறிமுகமாகும். இந்த எலெக்ட்ரிக் மாடல் கொண்டு இந்திய சந்தையில் முன்னோட்டம் பார்க்க முடியும்,' என ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் பிராண்டு இயக்குனர் ஜாக் ஹாலிஸ் தெரிவித்தார்.
Tags:    

Similar News