இது புதுசு
ஸ்கோடா கோடியக்

வெளியீட்டுக்கு முன் புது கார் அம்சங்களை அறிவித்த ஸ்கோடா

Published On 2022-01-06 08:48 GMT   |   Update On 2022-01-06 08:48 GMT
ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கோடியக் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
 

ஸ்கோடா நிறுவனம் புதிய கோடியக் பேஸ்லிப்ட் மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், வெளியீட்டுக்கு முன் புதிய கார் அம்சங்களை ஸ்கோடா தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அறிவித்து இருக்கிறது. மேம்பட்ட எஸ்.யு.வி. மாடலை தொடர்ந்து ஸ்கோடா நிறுவனம் ஸ்லேவியா செடான் மாடலையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

2022 ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடலில் பட்டர்ஃபிளை கிரில், வெர்டிக்கல் ஸ்லாட்கள், குரோம் சரவுண்ட், எல்.இ.டி. ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர். எல்., புதிய முன்புற பம்ப்பர், அலாய் வீல்கள், சில்வர் ரூப் ரெயில்கள், டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள், பூட் லிட் மீது ஸ்கோடா பெயர், எலெக்ட்ரிக் டெயில் கேட் மற்றும் விர்ச்சுவல் பெடல் உள்ளது.



காரின் உள்புறம் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் கனெக்டிவிட்டி, 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், பானரோமிக் சன்ரூப், 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய கோடியக் பேஸ்லிப்ட் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர், டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

இந்த என்ஜினுடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் யூனிட், 4x4 சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடல் மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. 
Tags:    

Similar News