ரிஷபம் - குரோதி வருடம் வருட பலன்

சோபகிருது வருட பலன் 2023

Published On 2023-04-08 08:20 GMT   |   Update On 2023-04-08 08:21 GMT

தொழில் வெற்றி!

அழகு, இனிமை, ஆனந்தம் ஈர்ப்பு சக்தி கொண்ட ரிஷப ராசியினருக்கு இந்த தமிழ் புத்தாண்டு வெற்றியை வழங்க நல் வாழ்த்துக்கள். பிறக்கப் போகும் இந்த சோப கிருது வருட தமிழ் புத்தாண்டில் அனைத்து வருட கிரகங்களும் ரிஷப ராசிக்கு சாதகமாக உள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி ஏப்ரல் 22ல்நடக்கப் போகும் குருப்பெயர்ச்சியில் குருபகவான் ராசி க்கு 12-ம்மிடம் செல்கிறார். ஜனவரி17ல் நடந்தசனிப்பெயர்ச்சியில்சனிபகவான் தொழில்ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார்.

தற்போது 12, 6ம் மிடத்தில் சஞ்சரிக்கும் ராகு/கேதுக்கள் அக்டோபர் 30, 2023ல் 11, 5ம் மிடம் செல்கிறார்கள். மன ஆற்றலும் மன உறுதியும் அதிகரிக்கும். உடலும் மனமும் பொலிவு பெறும். தடைபட்ட மகிழ்ச்சியும் சந்தோசமும் இனி தொடரும். இளம் சிறார்கள் நன்றாக படிப்பார்கள். போட்டி பந்தயம் போன்ற வற்றில் ஆதாயம் உண்டு. வம்பு, வழக்கு, சண்டை, அவமானம் முடிவிற்கு வரும்.விரயச் செலவுகள் அதிகரிக்கும்.தொழில் முன்னேற்றம்உண்டாகும். தொழிலை மேம்படுத்த வங்கிகளின் மூலம் கடன் உதவி கிடைக்கும். சிலர் கூட்டுத் தொழிலில் இருந்து விடுபடுவார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

விற்க முடியாமல் கிடந்த பூர்வீகச் சொத்துக்கள் விற்கும். எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட தொல்லைகள் சீராகும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தானாக வந்து சேரும். வீடு, வேலை மாற்றம் செய்வீர்கள்.மாங்கல்ய தோஷம் விலகி திருமணம் நடைபெறும்.

குடும்பம் பொருளாதார நிலை: விலகிய உறவுகள் அவர்களின் தவறுகளை உணர்ந்து மீண்டும் விரும்பி வருவார்கள். குடும்பத்தினர் மீது உங்களுக்கு அக்கறை அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

உங்களைத் துரத்திய துக்கம், துயரம், சங்கடங்கள் விலகும். குறைந்த உழைப்பும் நிறைந்த வருமானமும் கிடைக்கும். பணம் பல வழிகளில் பையை நிரப்பும். பற்றாக்குறை பட்ஜெட் உபரி பட்ஜெட்டாகும். தொழில் வளர்ச்சியும், எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும்.கொடுத்த கடன்கள் வசூலாகும். கடன் பிரச்சனையிலிருந்துநிவாரணம் உண்டாகும்.சிலர் குடும்ப உறவுகளுக்காக ஜாமீன் பொறுப்பு ஏற்கும் நிர்பந்தம் உண்டாகும். எதிர்காலத்தில் அது உங்களை தர்ம சங்கடத்தில் மாட்ட வைக்கும் என்பதால் கவனம் தேவை.பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகளின் விசாரணை துரிதமாகும்.

பெண்கள்: பெண்களுக்கு சிறு தொழில், சுய தொழில் செய்யும் ஆர்வம் உண்டாகும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் செய்யும் யோகம் உள்ளது. சேமிப்பு, சிக்கனம் இவற்றில் கவனமாக இருப்பீர்கள்.

கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். மாமியார், நாத்தனார் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை உண்டாகும்.ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

கிருத்திகை 2,3,4: பரிபூரண வெற்றியும் மகிழ்ச்சியும் உண்டாகும் வருடம். மனதில் இருந்த இனம் புரியாத பயம் அகன்று தெளிவும், துணிவும் பிறக்கும்.புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். தொழில் ரீதியான முன்னேற்றம் இருக்கும். நிலையான வருமானம் உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமானபிரச்சனைகள்நல்ல முடிவிற்கு வரும். வெளிநாட்டுப் பயணம், வேலையில் நிலவிய தடை, தாமதங்கள் விலகும்.

எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். சுப விரயங்கள் அதிகரிக்கும். பாகப்பிரிவினை சுமூகமாகும். தந்தையின் அன்பும் ஆசியும் கிடைக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடும். பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சங்கடத்தில் ஆழ்த்திய நோய் வைத்தியத்திற்கு கட்டுப்படும். தினமும் சிவ கவசம் படிக்கவும்.

ரோகிணி: மாற்றங்கள் நிறைந்த வருடம். உங்கள் செயல்பாடுகளில் பிறரின் தலையீடு குறையும். குல தெய்வ தரிசனம் கிடைக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். தொழிலில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். கூலித் தொழிலாளிகளுக்கு சீரான வேலையும், வருமானமும் கிடைக்கும். தீராத கடனைத் தீர்க்கும் மார்க்கம் தென்படும். எதிரி தொல்லைகள் குறையும். நோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை மாறி சாதாரண வைத்தியத்தில் குணமாகும்.சிலரின் சொத்து வாங்கும் முயற்சி சித்திக்கும்.வீடு, வாகனத்தை பராமரிக்கு செலவு அதிகரிக்கும். கல்வி சார்ந்த விசயங்களில் ஏற்பட்ட தடை அகலும். புதிய எதிர்பாலின நண்பர்கள் கிடைப்பார்கள். ஆண்களுக்கு மாமனாருடன் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும். கை மறதியாக வைத்த நகை கிடைக்கும். தினமும் லலிதா சகஸ்ஹர நாமம் படிக்கவும்.

மிருகசீரிஷம் 1 ,2: சகாயங்கள் மிகுந்த வருடம். தைரியமும், தெம்பும் அதிகரிக்கும்.துணிந்து சில முடிவுகளை எடுத்து முன்னேறுவீர்கள். பற்றாக்குறை பட்ஜெட் உபரி பட்ஜெட்டாகும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்குபூர்வீகம் வந்து செல்லும் வாய்ப்புகள் உள்ளது. தொழில் உத்தியோக நிமித்தமாக அடிக்கடி பிரயாணம் செய்ய நேரும்.

வாடகை வீட்டில்வாழ்ந்தவர்கள் சொந்த வீடு வாங்கி குடியேறுவார்கள். பணிநிரந்தரமாகும்.அரசு வேலை கிடைக்கும்.வழக்குகள் சாதகமாகும்.

முறையான முன்னோர்கள் வழிபாட்டால் தடைபட்ட சுப காரியங்கள் கைகூடும். பிள்ளைகளின் திருமணம், புத்திரபாக்கியம், உயர் கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து விதமான சுபபலன்களும் கைகூடும். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும். தினமும் மகாலட்சுமி அஷ்டோத்திரம் படிக்கவும்.

பரிகாரம்: இந்த தமிழ் புத்தாண்டில் ரிஷப ராசியினர் முழுக்கமுழுக்க தங்கத்தாலான வேலூர் மாவட்டம் "ஸ்ரீபுரம் ஸ்ரீ லட்சுமி நாராயணிதங்க கோயில் சென்று வழிபட பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News