விருச்சகம் - ஆண்டு பலன் - 2024

ஆங்கில புத்தாண்டு ராசிப்பலன் 2023

Published On 2022-12-25 08:06 GMT   |   Update On 2022-12-25 08:06 GMT

வீரமான விருச்சிக ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். முன்னோர்களின் நல்லாசி யையும், குல தெய்வ அருளை யும் பெற்றுத் தரவிருக்கும் ஆரவாரமான புத்தாண்டாக இந்த வருடம் அமையப் போகிறது. அனைத்து விதமான நல்ல முயற்சிகளும் பலிதமாகும்.

மனதிற்குப் பிடித்ததை பிடித்தபடி செய்வீர்கள்.திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடைவீர்கள். இந்த வருடம் சனி மற்றும் ராகு கேதுவின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. குருவின் சஞ்சாரம் சற்று சுமாராக உள்ளதால் ஆன்மீக வழிபாட்டில் கவனம் செலுத்தினால் மலை போல் வந்த துன்பம் பனி போல விலகும்.

குருவின் சஞ்சார பலன்கள்:

விருச்சிக ராசிக்கு 2,5ம் அதிபதியான குருபகவான் ஏப்ரல் 22, 2023 வரை 5ம் இடத்திலும் அதன் பிறகு 6ம் இடத்திலும் சஞ்சாரம் . செய்கிறார். வீடு, வாகனம் போன்ற சுப விரயத்திற்கு கடன் பெறலாம். சுப செலவுகளுக்கு சகோதர சகோதரியிடம் இருந்து கணிசமான தொகை கிடைக்கும். தொழில் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உறவுகளிடம் அமைதிப் போக்கினை கையாளவும். நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் நலனில் அதிக கவனம் தேவை. ஆரோக்கியக் குறைபாட்டை முறையான வைத்தியத்தில் சரி செய்ய முடியும்.

வாழ்க்கைத் துணையின் பிரச்சினைகள் தீரும். ஆடம்பரச் செலவைக் குறைப்பதன் மூலம் சேமிப்பை அதிகரிக்க முடியும். குருவினால் எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் பாதிப்பு இருக்காது. குடும்ப நலனுக்காக ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வர திட்ட மிடுவீர்கள். தடைபட்ட வேலை கிடைக்கும். வேலையாட்களால் தொல்லைகள் உருவாகலாம்.அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். பழைய வீட்டை புதுப்பித்து பொழிவு பெறச் செய்வீர்கள்.

சனியின் சஞ்சாரபலன்கள்:

ராசிக்கு 3, 4ம் அதிபதியான சனி பகவான் ஜனவரி 17, 2023 முதல் 4ம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். இது அர்தாஷ்டமச் சனியின் காலமாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். தேடி வரும் அதிர்ஷ்டத்தை தக்க சமயத்தில் பயன்படுத்தி பலன் பெறுவார்கள். தகுதிக்கும் திறமைக்கும் மீறிய வருமானம் கிடைக்கும். பங்குச் சந்தையில், யூக வணிகத்தில் பெரும் லாபத்தை கொடுப்பார்.

பூர்வீகச் சொத்தில் நிலவிய குழப்பங்கள் தீரும். குழந்தைகளால் ஏற்பட்ட தர்ம சங்கடங்களும் பிரச்சனைகளும் அகலும்.புத்திர தோஷம் நீங்கும்.பிள்ளைகளுக்கு சுப நிகழ்வுகள் நடக்கும். சிலருக்கு புதியதாக காதல் உருவாகும். சிலருக்கு பட்டுப் போன காதல் மீண்டும் துளிர்விடும். புகழ், அந்தஸ்து, கவுரவம் உண்டாகும்.

மனதளவில் ஆன்மீக வாதியாகவும் வெளி உலகத்திற்கு நாத்திகவாதியாகவும் மனதளவில் ஆன்மீகவாதியாகவும் இருப்பவர்களின் பக்தி வெளிப்படையாகும். சாஸ்த்திர நம்பிக்கை அதிகரிக்கும். குல தெய்வக குற்றம் நீங்கும். குல தெய்வ கோவிலுக்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பு உண்டாகும். வயதான சிலர் பூர்வீகம் சென்று செட்டிலாவார்கள். அயல் நாட்டிலிருந்து பூர்வீகம் திரும்ப முடியாமல் சிரமப்பட்டவர்களுக்கு பூர்வீகம் திரும்பக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும். விரும்பிய பதவி மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் பதவியில் திறமைக்கு ஏற்ற பாராட்டும் பரிசும் கிடைக்கும். பணிச்சுமை குறையும். தொழிலில் புதிய சிந்தனைகளை செயல்படுத்துவீர்கள். தாய் மாமாவின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும்.

ராகு/கேதுவின் சஞ்சார பலன்கள்:

அக்டோபர் 30, 2023 வரையில் ராசிக்கு 6ல் ராகுவும், 12ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். அதன்பிறகு ராகு 5ம் இடத்திற்கும், கேது 11ம் இடத்திற்கும் செல்கிறார்கள்.

பண வரவு அமோகமாக இருக்கும். பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல வாபத்தை பெற்றுத்தரும். பத்திரிக்கை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளின் பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்ய உகந்த காலம்.பிள்ளைகளின் சுப நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும். இழந்த பதவி தேடி வரும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டு. பூர்வீகச் சொத்தில் நிலவி வந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும். அரசியல்வாதிகளுக்கு ஆதாயம் உண்டு. மகன், மகளுக்கு எதிர்பார்த்திருந்த வேலை கிடைக்கும்.பிள்ளைகளின் சுப நிகழ்விற்கான பேச்சு வார்த்தை நடக்கும்.அதனால் சில செலவுகளும் வரும். கூட்டுத் தொழில் புரிபவர்கள் பொறுமை, நிதானத்துடன் இருக்க வேண்டும். தாய், தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

திருமணம்: திருமணமாகதவர்களுக்கு திருமணம் கூடி வரும். திருமணக் கனவு நினைவாகும். ராசிக்கு சனியின் பத்தாம் பார்வை இருப்பதால் நல்ல சொந்த தொழில் செய்யும் வரன் அமைய வாய்ப்புள்ளது. வெகு சிலருக்கு அர்தாஷ்டமச் சனியால் திருமணம் தள்ளிப் போகலாம்.

பெண்கள்: தம்பதிகளின் உறவில் அந்யோன்யம் நீடிக்கும்.புதிய முயற்சிகளை கவனத்துடன் அணுகவும்.ஆரோக்கியத்தில் அக்கரை தேவை.தாய் வழி இல்ல விசேஷங்களில் நடைபெறும் உறவுகளின் சந்திப்பு பால்ய வயது இன்பங்களை மலரச் செய்யும். சகோதரருக்கு கொடுத்த பணம் வசூலாகும்.குடும்ப உறவுகளிடையே நிலவி வந்த சங்கடங்கள் மறையும். தன வரவு தாராளமாக இருக்கும். அடமான நகைகள் மீண்டு வரும்.

மாணவர்கள்: கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மீண்டும் தொடர வாய்ப்பு கிடைக்கும். சிலர் அரியர்ஸ் பாடத்தையும் சேர்த்து எழுதி உயர் கல்விக்குச் செல்வார்கள். குழந்தைகள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவார்கள். வேற்று மொழி கற்கும் ஆர்வம் அதிகரிக்கும்.

விசாகம் 4: மன சஞ்சலங்கள் பஞ்சம குருவால் சீராகும். பிரிந்த நட்புகள் மலரும். உறவுகளால் ஏற்பட்ட பகைமை மாறும். சொத்துக்காக சண்டையிட்டவர்கள் சொந்தம் தான் முக்கியம் சொத்து முக்கியமல்ல என்பதை உணர்வார்கள். புரிதல் உண்டாகும். தடைபட்ட பொருள் வரவு சீராகும். திருமணம், குழந்தை பேறு போன்ற சுப விசயங்கள் மனதில் மட்டற்ற மகிழ்சியை தரும்.கடன்களால் ஏற்பட்ட கவலைகள் அகலும்.பெண்களுக்கு எதிர்பார்த்த உத்தியோக மாற்றம் சித்திக்கும் கணவன், மனைவி உறவில் அன்பு அதிகரிக்கும். புத்தியை தீட்ட வேண்டிய காலம்.புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். நினைப்பதெல்லாம் நடக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பூர்வீகச் சொத்தை விற்று புதிய வீடு வாங்குவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். தங்கம் வாங்குவீர்கள். பிரார்த்தனைகள் உடனே பலிதமாகும்.

பரிகாரம்: பெளர்ணமி திதியில் சத்திய நாராயணர் பூஜை நல்ல பலன்கள் அதிகரிக்கும்.

அனுஷம்: தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கோபம் குறையும். வீண் அலைச்சல் நீங்கும். வியாபாரத்தில் தேங்கிய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் குறைந்தநேரம் வேலை பார்த்து அதிக வருமானம் ஈட்டுவீர்கள். தொழில், வேலையில் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வெளிவட்டாரத் தொடர்புகள் மூலம் தொழில், வியாபாரம் விரிவடையும். மனதிற்கு பிடித்த வரன் அமையும். பெரியோர்களின் நட்பும் நல் ஆசியும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். விரும்பிய வரன் கை கூடி வரும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சொத்து விசயத்தில் இருந்த வழக்குகள் சாதகமாகும். சொத்துக்கள் விற்பனையால் ஆதாயம் உண்டு.பெற்றோரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணவரவு சரளமாகும். உறவுகளின் அன்பில் உள்ளம் குளிரும்.

பரிகாரம்: குலதெய்வ வழிபாட்டை முறைப்படுத்த பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமை அடையும்.

கேட்டை: எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையாட்களால், உடன் பணிபுரிபவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமூகமாகும். மறைமுக எதிர்ப்புகள் விலகி நன்மை உண்டாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். அசையாச் சொத்து வகையில் அனுகூலங்கள் உண்டாகும். இளவயதினருக்கு புத்திர பிராப்தி உண்டாகும். வயோதிகர்களுக்கு தாத்தா, பாட்டி யோகம் உண்டு. ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பும், முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். நண்பர்கள், நிதி நிறுவனங்கள் மூலம் பண உதவி கிடைக்கும்.

வீட்டில் சிறுசிறு சுப மங்கல நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். இல்லத்து விசேஷங்களுக்கு பாராமுகம் காட்டிய உறவுகளின் வருகை ஆனந்த கண்ணீரை வரவழைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட இன்னல் தீரும்.தம்பதிகளிடையே இணக்கமான சூழல் நிலவும். வரவு செலவு சீராக இருக்கும். ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும்.

பரிகாரம்:ஞாயிற்று கிழமை காலை 6-7 சூரிய ஓரையில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

விருச்சிக ராசியினர் புத்தாண்டில் சென்று வழிபட வேண்டிய ஸ்தலம் திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில். இங்கு சென்று வழிபட்டு வர சங்கடங்கள் நீங்கி ஒளிமயமான எதிர்காலம் அமையும்.

Similar News