துலாம் - குரோதி வருடம் வருட பலன்

சோபகிருது வருட பலன் 2023

Published On 2023-04-08 08:22 GMT   |   Update On 2023-04-08 08:22 GMT

புது வசந்தம் வீசப்போகிறது.!

நியாயத்திற்கு துணை நிற்கும் துலாம் ராசியினருக்கு இந்த சோப கிருது வருட தமிழ் புத்தாண்டு புதிய வாழ்க்கைப்பாதையை காட்டும் புத்தாண்டாக அமைய நல் வாழ்த்துக்கள். ஆண்டின் தொடக்கத்தில் திருக்கணித பஞ்சாங்கப்படி ஏப்ரல் 22 முதல் குருபகவான் ராசிக்கு ஏழாமிடம் சென்று உங்கள் ராசியை பார்க்கிறார்.ஜனவரி 17 முதல் சனி பகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தற்போது 7, 1ம்மிடத்தில் சஞ்சரிக்கும் ராகு கேதுக்கள் அக்டோபர் 30, 2023க்குப் பிறகு 6,12ம்மிடம் செல்கிறார்கள்.

இந்த தமிழ் புத்தாண்டில் அனைத்து வருட கிரகங்களும் ஓரளவு சாதகமாக உள்ளதால் புதிய முயற்சிகள் கைகூடும். உங்கள் வாழ்க்கை நிலை உயரப்போகிறது. நீங்கள் பிறந்த பலனை அடையப் போகிறீர்கள். உங்கள் புகழ், பெருமையை உற்றார், உறவினர் அறியப்போகிறார்கள். எதையோ இழந்தது போல் வருத்தப்பட்டவர்கள் வாழ்க்கையில் புதுவசந்தம் வீசப்போகிறது. தோற்றத்தில் மிடுக்கு கூடும். செயலில் வேகம் அதிகரிக்கும்.

உங்கள் வாட்டி வதைத்துக் கொண்டிருந்த நோய்கள் அகலும். உடலின் ஐம்புலன்களும் மகிழ்ச்சியடையும். சொத்து, வீடு,வாகனம் என உங்கள் ஆழ்மன எண்ணமும் ஆசையும் நிறைவேறும். வேலை இல்லாதவர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும்.

குடும்பம், பொருளாதார நிலை: இதுவரை உங்களுக்கு கிடைக்கவில்லை என்று ஏங்கிக்கொண்டு இருந்தீர்களோ அவையெல்லாம் உங்களுக்கு கிடைக்கும். தொட்டதெல்லாம் வெற்றி என்ற நிலை உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு இக் காலம் வசந்த காலமாக இருக்கும்.

லாபம் பல வழிகளிலும் வரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். கேட்ட இடத்தில் கேட்ட உதவி கிடைத்து முன்னே ற்றம் காண்பீர்கள். வறுமையில் வாடியவர்களுக்கு வாழ்வில் வசந்தம் வீசும். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சனை குறையும்.பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும். வசதியும், அந்தஸ்தும் அதிகரிக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.

குடும்பத்திலும் நட்பு வட்டாரத்திலும் சுமூகமான நிலை நீடிக்கும். தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்த ஆபரணங்களை வாங்கி அணிவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கலாம்.சிலருக்கு ராஜயோகமாக அடிப்படையில் கைவிட்டுப் போன சொத்துகிடைக்கும்..திருமணத் தடை அகலும்.

பெண்கள் : பெண்களின் புத்தி சாதுர்யத்தால் குடும்பத்தில் அமைதி நிலவும்.வீடு, வாகனம், அலங்கார ஆடம்பர பொருட்கள், உயர் ரக ஆடைகள் நகைகள் என வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். புகுந்த வீட்டாருடன் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறையும். இல்வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.தாய் வழியில் ஏற்பட்ட மனக்கவலைகள், கருத்து வேறுபாடு அகலும்.உங்கள் சேமிப்புகள் சுப விரயங்களாக மாறும். வேலை செய்யுமிடத்தில் பிரச்சனைகள் குறையத்துவங்கும்.

சித்திரை 3, 4 : திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் காலம். தொழில் வளம் சிறக்கும் காலம். வாக்கு சாதுர்யத்தால் தொழிலில் நல்ல வருமானம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக டென்ஷன் குறையும்.உங்கள் மீது போடப்பட்டவழக்கில் தீர்ப்பு சாதகமாகும் அல்லது தண்டனைக் காலம் குறையும். தாய்மாமனுடன் இருந்த மனஸ்தாபம் குறையும். மூத்த சகோதர வகையில் ஆதாயம் உண்டு.இளைய மனைவியின் மூலம் சொத்து கிடைக்கும்.ஒரு சிலர் விருப்ப ஓய்வு பெறுவார்கள். பாலிசி முதிர்வு தொகை, எதிர்பாராத பண வரவு உண்டு. ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவர். தொழில் நிமித்தமாக பிரிந்த தம்பதியினர் சேர்ந்து வாழ்வார்கள்.புதிய சொத்து வாங்கும் போது முக்கிய ஆவணங்களை சரிபார்க்கவும்.ஸ்ரீ லலிதா திரிசதி நாமாவளி படிக்கவும்.

சுவாதி : மனநிறைவும், நிம்மதியும் அதிகரிக்கும் காலம். செயல் திறனில்மாற்றம் ஏற்பட்டுலகுவாக பணியாற்றி நற்பெயர்பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். மருமகன் மகன் ஸ்தானத்தில் நின்று உங்கள் தேவைகளை நிறைவு செய்வார். குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். அரசு வேலை முயற்சி சாதகமாகும். கூட்டாளிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். சில காரியங்கள் ஆரம்பிக்கும் போது தோல்வி தருவது போல் இருந்தாலும் முடிவில் வெற்றியைக் கொடுக்கும். தொட்டது துலங்கும்.வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் அல்லது வாபஸ் பெறப்படும். தந்தை வழிச் சொத்துப்பிரச்சனைகள் சித்தப்பா, பெரியப்பாவின் மூலம் தீர்த்து வைக்கப்படும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நினைவாகும்.ஸ்ரீ குபேர லஷ்மி அஷ்டோத்திரம் படிக்கவும்.

விசாகம் 1,2,3 : சகாயங்கள் நிறைந்த வருடம். வசீகரமான தோற்றம் ஏற்படும். சாஸ்திர ஞானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை சீராகும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை மறையும். குடும்ப சுமை குறையும். பணம் எனும் தனம்சமூக அங்கீராத்தை பெற்றுத் தரும். ராஜ மரியாதை கிடைக்கும்.

வெளியூர், வெளிநாட்டு வேலை அல்லது குடியுரிமை பெற்று செட்டிலாவது போன்ற பலன்களை எதிர்பார்க்கலாம். கடன்காரர்களின் கெடுபிடி குறையும். வாழ்க்கைத் துணையால் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டு. தம்பதிகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மாறி புரிதல் உண்டாகும். அனாவசிய வைத்தியச் செலவு இருக்காது. அங்காளி பங்காளி வகையில் நிலவிய மனக்கசப்புகள் விலகும். மகாலஷ்மி காயத்திரி மந்திரம் படிக்கவும்.

பரிகாரம் : துலாம் ராசியினர் சுக்ரனின் அம்சம் பெற்ற சென்னை மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரரை வழிபட ஏற்றமான பலன் உண்டாகும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News