வார ராசிபலன் 21.9.2025 முதல் 27.9.2025 வரை
21.9.2025 முதல் 27.9.2025 வரை
பெற்றோர்களின் ஆசிர்வாதம் நிறைந்த வாரம். ராசிக்கு செவ்வாயின் நான்காம் பார்வை உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தாயின் நல் ஆசியும், தாய் வழிச் சொத்துக்களும் கிடைக்கும். தீபாவளிக்கு எக்ஸ்சேஞ்ச் ஆபரில் பழைய வாகனங்களை கொடுத்து விட்டு புதிய வாகனங்கள் வாங்க திட்டமிடுவீர்கள்.
மனைவி வழிச் சொத்தில் நிலவிய மாற்றுக் கருத்துக்கள் மாறும். படித்த இளைஞர்களுக்கு திறமைக்கு தகுந்த வேலை கிடைக்கும். புதிய தொழில், உத்தியோக முயற்சிகள் வெற்றி உண்டாக்கும். கடன், நோய், எதிரி சார்ந்த பாதிப்புகள் குறையத் தொடங்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். அடமான சொத்துக்கள் நகைகளை மீட்கக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும்.
நீண்ட நாள் நோய் தாக்கம் மாற்று முறை வைத்தியத்தில் சீராகும். மறைமுகத் தொந்தரவு கொடுத்தவர்கள் விலகுவார்கள். 21.9.2025 அன்று மாலை 3.58 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். நவராத்திரி காலங்களில் கோவில்களுக்கு தேவையான மலர் தானம் வழங்க குடும்ப குழப்பங்கள் சீராகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406