மேஷம் - குரோதி வருடம் வருட பலன்

சோபகிருது வருட பலன் 2023

Published On 2023-04-08 08:17 GMT   |   Update On 2023-04-08 08:20 GMT

தொட்டது துலங்கும்!

முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் மேஷ ராசியினருக்கு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.இந்த சோப கிருது வருட தமிழ் புத்தாண்டில் அனைத்து வருட கிரகங்களும் மேஷ ராசிக்கு சாதகமாக உள்ளது. திருக்கணித பஞ்சாங்கப்படி ஏப்ரல் 22ல்நடக்கப் போகும்

குருப்பெயர்ச்சியில் குருபகவான் ராசிக்குள் நுழைகிறார்.ஜனவரி 17ல் நடந்த சனிப்பெயர்ச்சியில்சனிபகவான்லாப ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார்.அக்டோபர் 30, 2023 வரை ராசி ஏழாமிடத்தில் நிற்கும் ராகு/கேதுக்கள் அதன் பின் 12, 6ம்மிடம் செல்கிறார்கள். எந்த செயலையும் தள்ளி வைக்காமல் உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். நினைத்ததை சாதித்துவெற்றியடைவீர்கள். அடுத்தவரின் தயவை எதிர்பார்க்காமல் எல்லா செயல்களிலும் நேரடியாக செயல்பட்டு உங்களுக்கு என்று தனி முத்திரை பதிப்பீர்கள்.எந்த இடத்திலும் உங்கள் தனித்தன்மை மிளிரும் படி செயல்படுவீர்கள்.

எவராலும் அடக்க முடியாத சக்தி கொண்டவர்களாக எதிரியை வெல்வீர்கள். புத்திர பிராப்பதம், அதிர்ஷ்டம், குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும். பித்ரு தோஷம் நிவர்த்தியாகும்.கடன், நோய் நிவர்த்தி, சுப விரயம் வெளிநாட்டு பயணம் ஏற்படும்.

தொழில் உத்தியோகத்தில் ஸ்திர தன்மை உண்டாகும். தொழில் வியாபார ரீதியான போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வர வேண்டிய வாய்ப்புகள் தடைபடாது.

இது மேஷ ராசிக்கு வாழ்வியல் மாற்றத்தை வழங்கக் கூடிய சுப ஆண்டாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

குடும்பம், பொருளாதார நிலை: கொடுத்த வாக்கையும் ,நாணயத்தையும் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் தீர்க்க முடியாது நிலவிய பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.தந்தை மகள் ஒற்றுமை பலப்படும். உங்கள் குடும்ப விவகாரங்களில் தலையிட்டவர்கள் தாமாக விலகுவார்கள்.நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கால் சொல்வாக்கு எடுபடும்.உறவுகளின் பகை மறையும்.உடல் நிலையில் முன்னேற்றம், மன நிலையில் மகிழ்ச்சி உண்டாகப் போகிறது.

கடந்த கால மனக்கசப்புகள் விலகி நிம்மதி பிறக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. ஒரு பெரும் பணம் சொத்து விற்பனையில் கிடைக்கும். பற்றாக்குறை வருமானத்தால் கவலை அடைந்தவர்களுக்கு உபரி வருமானம் உண்டாகும்.நிலையான தொழில் வளர்ச்சியால் கணிசமான பணம் கைகளில் புரளும்.கடன் சுமை தீரும். பூர்வீகச் சொத்துக்கள் உங்களுக்கு சுமூகமான பாகப்பிரிவினையில் கிடைக்கும்.திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளின் திருமண முயற்சி சாதகமாகும்.வழக்குகளில் வெற்றி உண்டாகும். திருமணத் தடை அகலும்.

பெண்கள்: பெண்களுக்கு பொருளாதாரப் பற்றாக்குறை அகலும்.விலை உயர்ந்த ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேறு வேறுஊர்களில் பணிபுரிந்த தம்பதிகள் ஒரே இடத்தில் பணிபுரியும் வகையில் இடமாறுதல் கிடைக்கும். பணிபுரியும் பெண்களின் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். உங்களின் முயற்சிக்கு கணவரின் ஆதரவும், உதவியும் கிடைக்கும்.ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

அசுவினி: காரிய சித்தி உண்டாகும் காலம் உடலும், மனமும் பொலிவு பெறும். ராசியில் குருபகவான் சஞ்சரிப்பதால் ஆன்ம பலம் பெருகி உடலும், மனமும் பொலிவு பெறும். தைரியம், தெம்பு அதிகமாகும். பிள்ளைகளால் நன்மையும், பெருமையும் உண்டாகும். அவர்களின் எதிர்காலம் பற்றிய பய உணர்வு அகலும். குடும்பத்தேவையைநிறைவேற்றுவீர்கள். தொழிலில் அபிவிருத்தி உண்டாகும்.பணவரவு தாராளமாக இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். பொன், பொருள் வாங்கும் பாக்கியம் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் தந்தையால் பொருள் இழப்பு உண்டாகலாம். முன்னோர்கள் வழிபாட்டிற்கு உரிய பலன் கிடைக்கும் காலம். அரசு வழி ஆதாயம் கிடைப்பதில் நிலவியதடை, தாமதம் அகலும்.தினமும் விநாயகர் அகவல் படிக்கவும்.

பரணி: எதிர்பார்த்த முன்னேற்றம் எளிதில் கிடைக்கும் காலம். ராசியை விட்டு ராகு நகர்ந்த பிறகு உங்கள் செயல்பாட்டில் மற்றவர்களின் குறிக்கீடு இருக்காது. தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். தாயின் உடல் நலம் சீராகும். உயர் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். வாழ்க்கைத் துணையின் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் நல்லுறவு ஏற்படும். இடமாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் என நிம்மதியைத் தரும் மாற்றங்கள் உண்டு. ஒரு சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிலருக்கு தொழில் செய்யும் எண்ணம் உருவாகும்.

பூர்வீகச் சொத்தை கொடுத்து விட்டு புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் ரீதியான அனுகூலம் உண்டாகும். தினமும் மகாலட்சுமி அஷ்டகம் படிக்கவும்.

கிருத்திகை 1 : நிம்மதியான காலம்.நினைத்ததை நினைத்தபடியே முடிப்பீர்கள். லட்சியங்களும் கனவுகளும்நிறைவேறும். தன்னம்பிக்கையும்தைரியமும் அதிகரிக்கும். அனைத்து தடைகளும் விலகி நல்ல வாழ்வியல் மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். சகோதரரின் ஆதரவு மகிழ்ச்சியை அதிகரிக்கும். பிள்ளைகளால் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும். வாழ்க்கை துணைக்கு தாய் வீட்டுச் சீதனமாக பெரும் சொத்து கிடைக்கும். இழந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.

பெற்றோர் வழியில் இருந்த எதிர்ப்புகள் அகலும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாட்டில் சென்று பிழைக்கும் எண்ணம் தோன்றும். தாயின் ஆரோக்கியம் சீராகும். தினமும் ஆதித்ய ஹ்ருதயம் கேட்கவும்.

பரிகாரம்:திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஸ்ரீ வாஞ்சியம், வாஞ்சிநாதர் கோவில் சென்று ஸ்ரீ வாஞ்சிநாதரையும், ஸ்ரீ மங்களாம்பிகையையையும் வழிபடவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News