ஆன்மிக களஞ்சியம்
null
துளசியின் கற்பு நெறியே சங்கசூடனுக்கு அரணாக உள்ளதை உணர்ந்த பெருமாள்
- பிறகு 10 தோத்திரங்களால் பகவான் துளசியை புகழ்ந்துரைத்து துதித்தார்.
- வைகுந்தவாசனே தன்னை துதித்ததை எண்ணி துளசி தன்னை மறந்தாள்.
சங்கசூடனின் மனைவி துளசி மகாபதி விரதை, கற்புக்கரசி கணவன் சொல்லை மீறி எந்த செயலும் செய்யாதவள்.
அழகு, அன்பு, கருணை, அனைத்தும் நிறைந்தவள். அவளின் கற்பின் திறன் கணவனுக்கு அரணாக விளங்கியது.
துளசியின் கற்பின் மகிமையை உணர்ந்த பரந்தாமன் கற்புக்கு அரணாக விளங்கும் துளசியை புகழ்ந்து ஸ்தோத்திரம் சொல்வதை தவிர வேறு வழியே இல்லை என்று முடிவு செய்தார்.
பிறகு 10 தோத்திரங்களால் பகவான் துளசியை புகழ்ந்துரைத்து துதித்தார்.
வைகுந்தவாசனே தன்னை துதித்ததை எண்ணி துளசி தன்னை மறந்தாள்.
நெஞ்சம் நெகிழ்ந்தாள் மிகவும் மகிழ்ந்தாள். அன்பை பொழிந்தாள். அவரை வாயார போற்றிப்பாடினாள்.
ஆடினாள். கற்புக்கனலாக நின்ற அவளை நாராயணர் ஆதரவாகப் பார்த்து வேண்டிய வரங்களைக் கேள் என்றார்.