null
துளசி கதை-மும்மூர்த்திகளுக்கும் சங்கசூடனுக்கும் நடந்த யுத்தம்
- முன்னொரு காலத்தில் சங்கசூடன் என்னும் ஓர் அசுரன் இருந்தான்.
- அவன் அருந்தவம் பல புரிந்து வரங்கள் பல பெற்றிருந்தான்.
முன்னொரு காலத்தில் சங்கசூடன் என்னும் ஓர் அசுரன் இருந்தான்.
அவன் அருந்தவம் பல புரிந்து வரங்கள் பல பெற்றிருந்தான்.
வரத்தின் மூலம் கிடைத்த பலத்தால் அவன் பல கொடுமைகளை செய்து வந்தான்.
குழந்தைகளை மிதித்தும். குணசீலர்களை கொடுமைப்படுத்தியும், யாகங்களை சிதைத்தும், பெண்களின் கர்ப்பை சூறையாடியும் களியாட்டம் போட்டு வந்தான்.
அவனது கொடுமைகளை தாங்க முடியாமல் மண்ணவரும், விண்ணவரும் பெரும் துயரம் அடைந்தனர்.
சங்கசூடனை அழிக்க வழி தெரியாமல் திணறினார்கள்.
கடைசியாக அவர்கள் மும்மூர்த்திகளிடம் சென்று தங்கள் குறைகளை முறையிட்டார்கள்.
அதனால் கோபம் அடைந்த மும்மூர்த்திகளுக்கும் சங்கசூடனுக்கும் யுத்தம் நடந்தது.
ஆனால் சங்கசூடனை யாராலும் வெல்ல முடிய வில்லை.
அதற்கு காரணம் அவன் கடுந்தவம் புரிந்து அதன் பயனாய் பெற்று தன் கழுத்தில் அணிந்திருந்த ஸ்ரீகிருஷ்ண கவசம் ஆகும்.
அந்த கவசம் அவன் கழுத்தில் இருக்கும் வரை அவனை யாராலும் வெல்லவோ, அழிக்கவோ முடியாது என்று மும் மூர்த்திகளும் உணர்ந்தனர்.