ஆன்மிக களஞ்சியம்

தனிச்சிறப்பு பெற்ற 8 கொடி மரம்

Published On 2024-04-08 10:47 GMT   |   Update On 2024-04-08 10:47 GMT
  • அம்மன் கரத்தில் சிவபூஜைக்காக இரண்டு தாமரை மலர்களை ஏந்திய வண்ணம் உள்ளாள்.
  • சிவபூஜை செய்யும் அம்பிகைக்கு இன்மொழித் தேவி என்று திருநாமம்.

வழக்கமாக உள்ள கொடி மரமே அல்லாமல் ஜலகண்டேசுவரர் கோவிலில் எட்டு திசைகளுக்கும் எட்டு துவஜஸ்தம்பங்கள் காணப்படுவது மற்ற ஆலயங்களில் இல்லாத தனிச்சிறப்பு.

இந்த எட்டு கொடிக் கம்பங்களும் எட்டு திசைகளைத் தாங்கும் எட்டு யானைகளையும் எட்டு திக்பாலகர்களையும் காட்டுகின்றன.

மற்ற ஈசுவர ஆலயங்களில் கர்பக்கிருகத்தின் பின்புறச் சுவற்றில் எழுந்தருளி இருக்கும் பெரிய பெருமானான லிங்கோற்பவர் இங்கு பிரகாரத்தில் உள்ளார்.

யானை பூஜை செய்து மீண்டும் வந்து பிறக்காமல் முக்தி பெற்றுச் சிவலோகம் சேர்ந்த திருவானைக்காவலில் பராசக்தி நாள்தோறும் சிரத்தையுடன் சிவ நினைவில் மூழ்கி சிந்தனை வேறு எங்கும் சிதறாமல் பக்தியுடன் ஜம்புலிங்கத்தைப் பூஜை செய்து வாழ்கின்றாள்.

மூலமுழுமுதற் பொருளின் அபிஷேகத்துக்காக பால், தயிர், வெண்ணை, நெய், திருநீறு ஆகிய பஞ்ச கவ்வியம் எனப்படும் ஐந்து அபிஷேகப் பொருட்களை அளிக்கும் புனிதப் பிறவியான கோமாதாவையும் அம்மன் பூஜித்து மகிழ்ந்தாள்.

காமாட்சி அம்மனுக்கு ஏகாம்பரேஸ்வரர் அருளிச் செய்த வரத்திற்கு ஏற்ப திருவானைக்காவில் பராசக்தி எந்த விதமான தடையும் இல்லாமல் பூஜைக்கு பாதிப்பு இல்லாமல் வேறு சிந்தனை இல்லாமல் சிவ நினைவுடன் மந்திரங்களை ஓதி ஆத்ம திருப்தியுடன் நித்தமும் சிவபூஜை செய்கின்றாள்.

இதைக் காட்டும் வகையில் சிவாச்சாரியார் உச்சிக்காலப் பூஜையின் போது அம்மன் போன்று புடவை அணிந்து ஜம்புலிங்கப் பரம்பொருளையும், கோமாதாவையும் பூஜை செய்கின்றார்.

லிங்கப் பரம்பொருள் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் வலது பக்கமாக ஜலகண்டேசுவரர் இருக்கும் திசையை நோக்கியவாறு அம்மன் சன்னதி அமைந்துள்ளது.

அம்மன் கரத்தில் சிவபூஜைக்காக இரண்டு தாமரை மலர்களை ஏந்திய வண்ணம் உள்ளாள்.

சிவபூஜை செய்யும் அம்பிகைக்கு இன்மொழித் தேவி என்று திருநாமம்.

Tags:    

Similar News