ஆன்மிக களஞ்சியம்

சிவன் பரதநாட்டியத்தை முதன் முதலில் அறிமுகம் செய்தல்

Published On 2024-02-12 10:37 GMT   |   Update On 2024-02-12 10:37 GMT
  • ஆடல் அரசன் சிவபெருமானால் பரதநாட்டிய கலை தோற்றி வைக்கப்பட்டது.
  • பரதநாட்டிய பழமைகளை பேணிக்காப்பதுடன் பல்வேறு புதுமைகளையும் புகுத்தியுள்ளார்.

பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர் போன்ற முனிவர்களை மகிழ்விக்கும் பொருட்டு முதல் முதலில் சிவபெருமான், பரதநாட்டிய ஆடிய திருத்தலம் உத்தகோசமங்கையாகும்.

பதஞ்சலி முனிவர் யோக சாஸ்திரத்தையும், பரத சாஸ்திர நூல்களை எழுதியுள்ளார்.

இந்த இரு முனிவர்களும் உத்தரகோசமங்கையில் திருவாதிரை தினத்தில் சிவபெருமான் ஆடிய நடனத்தைக் காண்பதற்கு தவம் இருந்தனர்.

அவர்களின் பக்திக்கு பணிந்த ஈசன் உத்திரகோசமங்கையில் மார்கழி மாதம் திருவாதிரை தினத்தில் தனது பரத நடனத்தை காட்டிய கருணையினாலும் உலக ஜனங்களுக்கு சிவன் முதல் முதலில் பரதநாட்டியத்தை இத்திருத்தலத்தில் தான் அறிமுகப்படுத்தினார்.

பரத சாஸ்திரம் நூல்களை சிவன் கற்றுக்கொண்டு இதற்கு அடிப்படை பாவம், ராகம் தாளம் என்ற சொற்களில் உள்ள முதல் எழுத்துக்களை எடுத்து ஒன்று சேர்த்து உருவாக்கி பரத நாட்டியம் என்று வெளியிட்டார்.

மரபு ரீதியில் வகுக்கப்பட்ட மூன்று இயல்புகளும் ஒன்றாக பொருந்தி, மனதில் உள்ள சுவையையும், அனுபவத்தையும், மெய்ப்பாடுகளில் அபிநயித்து ஆடுவதே பரத நாட்டியத்தின் உயிர்ப்பு என்று சிவன் பெயரிடுகின்றார்.

சிவபெருமான் பரத நாட்டியத்திற்கென்று பிரத்யேக உடைகளை ஆடலுக்கு ஏற்றது போல உலக ஜனங்களுக்கு காட்டியருளினார்.

நிற்பது, இருப்பது, தட்டுவது, மடக்குவது, நடப்பது, குதிப்பது,பாய்வது, வளைவது, சுற்றி வருவது என்று கால்களுக்கு சிறப்பு இடத்தையும் விதவிதமாக விரல்களை விரிப்பது, குவிப்பது இணைப்பது, பிரிப்பது, நெளிப்பது ஆகியவற்றுடன் நின்று கொண்டே கரங்கள் மூலம் குறிப்புகளை உணர்த்துவதும் பரத நாட்டியத்தின் தனிச்சிறப்பாகும் என சிவபெருமான் எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன் புருவங்களின் ஏற்ற, இறக்கம், இமைகளின் சிறகடிப்பு, சுழலும் கருவிழி, விழி வீச்சின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்துதல், புன்னகை மூலம் மலர்ச்சியை தெரிவிப்பது, வேதனையில் கண்கள் துடிப்பது, உதடுகளைச் சுழிப்பதன் மூலம், உள்ளத்தில் உள்ள வெட்கம், வேதனை, கோபம், கிண்டல் போன்ற உணர்வுகளை வெளிக்காட்டுதல் என்று அனைத்தையும் ஆழ்மனதில் இருந்து கொண்டு வருவது பரத நாட்டியத்தின் தனிச்சிறப்பாக சிவபெருமான் காட்டி அருளியுள்ளார்.

பரதநாட்டிய பழமைகளை பேணிக்காப்பதுடன் பல்வேறு புதுமைகளையும் புகுத்தியுள்ளார்.

அதன்படி பழமையான ஒரு கலை பராம்பரியம், பண்பாடு மாறாமல் பல புதுமைகளுக்கும் இடம் கொடுக்கிறது என்பதுதான் பரத நாட்டியத்தின் தனிச்சிறப்பாகும்.

அந்த வகையில் பரதநாட்டியர் கலை முதல் முதலில் உத்தரகோமங்கையில் தான் தோன்றியது என்பது இத்தலத்துக்கு மிகவும் சிறப்புக்குரியதாகவும் பெருமைப்படத்தக்கதாகவும் உள்ளது.

ஆடல் அரசன் சிவபெருமானால் பரதநாட்டிய கலை தோற்றி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News