சனிக்கிழமை தோறும் சிறப்பு அபிஷேகம்
- முன்னதாக அதிகாலை 6 மணிக்கு ஆலயம் திறந்ததும் சுப்ரபாதம் நிகழ்ச்சி நடைபெறும்.
- சனிக்கிழமைதோறும் அந்த அபிஷேகத்தை நடத்துவார்கள்.
நாகலாபுரம் வேதநாராயண சுவாமி ஆலயத்தில் தினமும் 3 கால பூஜை நடத்தப்படுகிறது.
காலை 8.30 மணி, பகல் 11 மணி, மாலை 6 மணிக்கு இந்த 3 கால பூஜை நடைபெறும்.
முன்னதாக அதிகாலை 6 மணிக்கு ஆலயம் திறந்ததும் சுப்ரபாதம் நிகழ்ச்சி நடைபெறும்.
6.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறும். 7 மணிக்கு தோமாலை சேவை நடைபெறும்.
7.30 மணிக்கு சகஸ்ர நாம அர்ச்சனை நடைபெறும்.
8 மணிக்கு முதல் மணி அடிக்கப்படும். 8.30 மணிக்கு சர்வ தரிசனம், 10 மணிக்கு 2வது மணி அடிக்கப்படும்.
மாலை 6 மணிக்கு தோமாலை சேவை, 6.30 மணிக்கு கைங்கர்யம், 7.45 மணிக்கு ஏகாந்த சேவை ஆகிய பூஜைகள் நடைபெறும்.
வாரத்தில் ஒருநாள் மட்டுமே மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.
சனிக்கிழமைதோறும் அந்த அபிஷேகத்தை நடத்துவார்கள்.
அன்று காலை 8 மணிக்கு தொடங்கி அனைத்து அபிஷேகங்களையும் செய்வார்கள்.
பக்தர்களும் இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்கலாம்.
வேதவல்லி தாயாருக்கு வெள்ளிக்கிழமைதோறும் அபிஷேகம் நடைபெறும்.
வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி அபிஷேகத்தை நடத்துவார்கள்.
இதில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த அபிஷேக தரிசனத்தை செய்தால் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது.