ஆன்மிக களஞ்சியம்

சனிக்கிழமை தோறும் சிறப்பு அபிஷேகம்

Published On 2024-02-18 18:11 IST   |   Update On 2024-02-18 18:11:00 IST
  • முன்னதாக அதிகாலை 6 மணிக்கு ஆலயம் திறந்ததும் சுப்ரபாதம் நிகழ்ச்சி நடைபெறும்.
  • சனிக்கிழமைதோறும் அந்த அபிஷேகத்தை நடத்துவார்கள்.

நாகலாபுரம் வேதநாராயண சுவாமி ஆலயத்தில் தினமும் 3 கால பூஜை நடத்தப்படுகிறது.

காலை 8.30 மணி, பகல் 11 மணி, மாலை 6 மணிக்கு இந்த 3 கால பூஜை நடைபெறும்.

முன்னதாக அதிகாலை 6 மணிக்கு ஆலயம் திறந்ததும் சுப்ரபாதம் நிகழ்ச்சி நடைபெறும்.

6.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறும். 7 மணிக்கு தோமாலை சேவை நடைபெறும்.

7.30 மணிக்கு சகஸ்ர நாம அர்ச்சனை நடைபெறும்.

8 மணிக்கு முதல் மணி அடிக்கப்படும். 8.30 மணிக்கு சர்வ தரிசனம், 10 மணிக்கு 2வது மணி அடிக்கப்படும்.

மாலை 6 மணிக்கு தோமாலை சேவை, 6.30 மணிக்கு கைங்கர்யம், 7.45 மணிக்கு ஏகாந்த சேவை ஆகிய பூஜைகள் நடைபெறும்.

வாரத்தில் ஒருநாள் மட்டுமே மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.

சனிக்கிழமைதோறும் அந்த அபிஷேகத்தை நடத்துவார்கள்.

அன்று காலை 8 மணிக்கு தொடங்கி அனைத்து அபிஷேகங்களையும் செய்வார்கள்.

பக்தர்களும் இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்கலாம்.

வேதவல்லி தாயாருக்கு வெள்ளிக்கிழமைதோறும் அபிஷேகம் நடைபெறும்.

வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி அபிஷேகத்தை நடத்துவார்கள்.

இதில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த அபிஷேக தரிசனத்தை செய்தால் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News