சனிபகவானுக்கு திருமண பாக்கியம் அருளிய சிவபெருமான்
- ஆலயத்தின் எதிரே தனிக்கோவிலில் விஜய விநாயகர், தன் தந்தையை நோக்கியபடி அமர்ந்திருக்கிறார்.
- தல விருட்சமான விளாமரம், கோவிலின் வடதிசையில் உள்ளது.
அட்சயபுரீஸ்வரர் தலத்தில் சிவபெருமான் அருளால் சனி பகவானுக்கு திருமணமாகும் பாக்கியமும் கிடைத்ததாம்.
எனவே இத்தலத்தில் மந்தாதேவி, ஜேஷ்டா தேவி என்ற இரு பத்தினிகளுடன் ஆதி பிருஹத் சனீஸ்வரர் என்ற பெயரோடு தனிச் சன்னதியில் அமைந்திருக்கிறார் சனி பகவான்.
இவரது ஊனத்தை காகம் வந்து பெற்றுக் கொண்டதாம். சனி பகவான் அந்தக் காலத்தையே தன் வாகனமாக ஏற்றார் எனவும் தலபுராணம் சொல்கிறது.
விபத்துகள், துர்மரணங்கள் ஏற்படாமல் இருக்கவும், எம பயம் நீங்கவும், நீண்ட ஆயுளைப் பெறவும், எதிரிகளால் ஏற்படும் அச்சங்கள், தொந்தரவுகள் நீங்கவும் அருள்புரியும் உத்தம மூர்த்தியாக இத்தலத்து சனி பகவான் கருதப்படுகிறார்.
தசாபுக்தியாலோ, ஜாதக ரீதியாகவோ சனி பகவான்யின் பாதிப்புக்கு ஆளானவர்கள், இத்தலம் வந்து சனி பகவானுக்கும், இறைவன், இறைவிக்கும் அர்ச்சனை செய்து விட்டு, பிராகாரத்தில் காக்கைக்கு உணவு படைக்கின்றனர்.
இதனால் சனி பகவான் தோஷம் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும் என்பத நிச்சயம்.
தல விருட்சமான விளாமரம், கோவிலின் வடதிசையில் உள்ளது.
பூச நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய ஆலயம் இது என்கிறார்கள்.
தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளிலும், நந்தி பகவானுக்கு பிரதோஷ காலங்களிலும், பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஆலயத்தின் எதிரே தனிக்கோவிலில் விஜய விநாயகர், தன் தந்தையை நோக்கியபடி அமர்ந்திருக்கிறார்.
அட்சய திருதியை அன்று சனி பகவான்பகவான் ஸ்தூல சூட்சும வடிவங்களில் அட்சயபுரீஸ்வரரை முழுவதும் வழிபடுவதாக ஐதீகம் நிலவுகிறது.