ஆன்மிக களஞ்சியம்

ராமாயண காலத்தில் வாழ்ந்த கருடக்கொடி சித்தர்

Published On 2024-02-03 12:12 GMT   |   Update On 2024-02-03 12:12 GMT
  • எப்போதும் இவர் சுலோகங்களை சொல்லிக் கொண்டே இருப்பார் என்று குறிப்புகள் உள்ளன.
  • கருட கொடி சித்தருக்கு சந்தன அபிஷேகமும் செய்யப்படுவது உண்டு.

இவர் கருட கொடியை உடல் முழுக்க சுற்றி உள்ளார்.

எப்போதும் இவர் சுலோகங்களை சொல்லிக் கொண்டே இருப்பார் என்று குறிப்புகள் உள்ளன.

ராமாயண காலத்திலேயே இவர் வாழ்ந்ததாக கருதப்படுகிறது. ராமர் எங்கெல்லாம் சென்றரோ அங்கெல்லாம் உடன் சென்றாக கூறப்படுகிறது.

ராமரை பாதுகாக்கும் வகையில் இவர் மூலிகை பந்தல் அமைப்பதுண்டு என குறிப்புகள் உள்ளன.

கருட கொடி என்பது கருடனுடன் தொடர்புடையது.

திருஷ்டியை நீக்குவதில் கருட கொடிக்கு அதிக ஆற்றல் உண்டு என்பார்கள்.

மேலும் கருட கொடிக்கு மந்திர சக்திகளை கிரகிக்கும் ஆற்றலும் உண்டு.

கருட கொடியை பயன்படுத்தி பல்வேறு நோய்களை தீர்த்துக் கொள்ளலாம்.

இத்தகைய சிறப்புடைய கருட கொடியை இந்த சித்தர் மிக அதிகளவில் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

வேறு எந்த சித்தரும் இவர் அளவுக்கு கருட கொடியை பயன்படுத்தியது இல்லை.

கருட கொடி சித்தரை வழிபட்டால் எத்தகைய பெரிய கண் நோயை குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆண்டாள் சன்னதியில் உள்ள கருட கொடி சித்தரின் சிலை மீது ரோஸ் தண்ணீரை அபிஷேகம் செய்து அதை கண்களில் ஒற்றி கொண்டால் பலன் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

கருட கொடி சித்தருக்கு சந்தன அபிஷேகமும் செய்யப்படுவது உண்டு.

அந்த சந்தனத்தை கண்களை மூடி புருவத்தின் மீது வைத்துக் கொண்டாலும் பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

Tags:    

Similar News