ஆன்மிக களஞ்சியம்

ராஜசபை

Published On 2024-02-09 12:06 GMT   |   Update On 2024-02-09 12:06 GMT
  • ஆயிரம் கால் மண்டபம் ராஜசபை என்று அழைக்கப்படுகிறது.
  • ராஜசபையில்தான் எல்லா வகையான இதிகாச, புராணங்கள் அனைத்தும் அரங்கேற்றம் செய்யபட்டன.

ஆயிரம் கால் மண்டபம் ராஜசபை என்று அழைக்கப்படுகிறது.

இங்கு 999 தூண்கள் மட்டுமே உள்ளன.

மீதமான ஒன்று நடராஜப் பெருமானின் ஊன்றிய கால்.

ஆக, மொத்தம் 1000 கால் மண்டபம் ராஜசபையாக விளங்குகிறது.

இது 5வது சபையாகும்.

இங்குதான் ஆனி (மிதுனம்), மார்கழி (தனுசு) மாதங்களில் நடைபெறும் ஒன்பதாம் திருநாள்களில் நடராஜப் பெருமான் திருத்தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளில் உலா வந்த பின்னர் இரவில் இந்த ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருந்து, விடியற் காலையில் அபிஷேகம் நடைபெற்று, பத்தாம் நாள் பிற்பகலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்குத் திருக்காட்சியளிப்பார்.

பிறகு பெருமான் முன்னதாகவும், பெருமாட்டி பின்னாலும் மாறி மாறி நடனம் செய்து கொண்டு சித்சபைக்குச் செல்வர்.

ராஜசபையில்தான் எல்லா வகையான இதிகாச, புராணங்கள் அனைத்தும் அரங்கேற்றம் செய்யபட்டன.

இன்றும் பல காரியங்கள் ராஜசபையில் தான் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன.

Tags:    

Similar News